வீட்டை விட்டு வெளியேறிய முல்லை.. பதறிப்போன பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கூட்டு குடும்பத்துடன் வாழும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையைக் முல்லையிடம் இருந்து கதிர் மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் மிகுந்த மன வேதனையில் உள்ள முல்லை எப்படியாவது உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் மீனாவுடன் சேர்ந்து டாக்டரிடம் செல்கிறார்கள். அங்கு முல்லையால் குழந்தை பெற்றெடுக்க முடியாது என்ற உண்மை தெரிய வருகிறது. அது தெரிந்த உடன் முல்லை மிகுந்த அதிர்ச்சி அடைகிறாள்.

இதனால் முல்லை வருத்தத்தில் உள்ளதால் அம்மா வீட்டுக்கு போய் வருகிறேன் என்று சொல்கிறாள். இதனால் மீனாவும் செய்வதறியாமல் முல்லையை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு மீனாவும் அங்கிருந்து செல்கிறார். கதிரின் ஏதோ ஒரு உள்ளுணர்வு தப்பாக சொல்ல முல்லையை தேடி வீட்டுக்கு வருகிறார்.

ஆனால் மீனா வீட்டில் அனைவரிடமும் முல்லை கடைக்கு சென்றுள்ளதாக பொய் சொல்லி உள்ளார். இந்நிலையில் கதிர் வந்து கேட்க உண்மை அனைவருக்கும் தெரிகிறது. இதனால் முல்லை காணாமல் போக வீட்டில் உள்ள அனைவரும் பதறி போகிறார்கள். இந்நிலையில் முல்லை ஒரு இடத்தில் அழுது கொண்டிருக்க கதிர் கண்களில் படுகிறாள்.

அப்போது முல்லை எனக்கு குழந்தை பிறக்காது, நான் எதற்கு உங்களுக்கு என கூறுகிறார். எனக்கு குழந்தையா முக்கியம், நீ தான் முக்கியம், உனக்கு நான் இருக்கேன் என கதிர் ஆறுதல் கூறுகிறார். அத்துடன் முல்லை மற்றும் கதிர் இருவரும் வீட்டுக்கு வருகின்றனர். அங்கு முல்லையின் அப்பா, அம்மாவும் உள்ளனர்.

எல்லோரிடமும் முல்லை நடந்ததை சொல்லி அழுகிறாள். இதனால் இனிமேல் முல்லை கதிருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு எடுப்பாள். ஆனால் கதிர் அதற்கு சம்மதிக்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனால் முல்லையின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்