ஒரே படத்தில் 11 பாடகர்களை பாட வைத்த மணிரத்னம்.. ஆனா பாட்டு ஹிட்டு படம் பிளாப்

தமிழ் சினிமாவில் ஒரு காதல் கதையை தன்னுடைய பாணியில் வித்தியாசமாக கொடுப்பதில் திறமையானவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் வெளியான ரோஜா, மௌன ராகம், பாம்பே உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது.

அந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் பிரசாந்த், ஆனந்த், ஹீரா உள்ளிட்டோர் இணைந்து நடித்த திருடா திருடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதிலும் ஏ ஆர் ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட்டானது

இத்திரைப்படத்தின் பாடல்களுக்காக இயக்குனர் மணிரத்னம், மனோ, சித்ரா, சுஜாதா, ஸ்ரீநிவாஸ், மின்மினி, அனுபமா, ஷாகுல் ஹமீத், உண்ணி மேனன், கங்கா உள்ளிட்ட ஏராளமான பாடகர்களை பாட வைத்துள்ளார். அதில் சந்திரலேகா, ராசாத்தி உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.

மேலும் மணிரத்னம் இப்படத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகிய இரண்டு பாடகர்களையும் நடிக்க வைத்துள்ளார். இரட்டை திருடர்களை பற்றிய இந்த கதையில் அவர்கள் இருவரும் காவல்துறையை சேர்ந்தவர்களாக நடித்திருப்பார்கள்.

இப்படத்தில் பாதிக்கு மேல் காட்சிகள் அனைத்தும் ட்ரெயினில் நடப்பது போல் எடுக்கப்பட்டிருக்கும். அப்படி ட்ரெயினில் படப்பிடிப்பு நடக்கும் போது எஸ்பிபி மற்றும் மலேசியா வாசுதேவன் இருவரும் மாறி மாறி பாடல்களை பாடிக்கொண்டு படப்பிடிப்பு தளத்தை மிகவும் கலகலப்பாக மாற்றி விடுவார்களாம்.

இதனால் திருடா திருடா படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அனைவரும் மிகவும் ஜாலியாக வேலை செய்துள்ளனர். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை தவிர சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது. முக்கோண காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து உருவான இந்த திரைப்படம் இன்றும் ரசிகர்களின் பேவரைட் படமாக உள்ளது. அதற்கு படத்தின் கதையோடு, ஏ ஆர் ரகுமான் இசையும் முக்கிய காரணம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்