கொஞ்ச கொஞ்சமாக ராதிகாவை வெறுக்கும் கோபி.. கேண்டினில் பாக்கியா கொடுத்த நோஸ் கட்

பாக்கியலட்சுமி சீரியலில் பெண்களின் செண்டிமெண்டை மையமாக வைத்து குடும்ப தொடராக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் கோபி தன்னுடைய சந்தோஷத்திற்காக எந்த விதத்திலும் நமக்கு செட்டாகாது என்று பாக்யாவை வேண்டாம் என்று முடிவு செய்து ராதிகாவை தேடி போய் திருமணம் செய்து கொண்டார். இனிமேலாவது நம்மளோட வாழ்க்கை நாம் நினைத்தபடி சந்தோசமாக இருக்கும் என்று நினைத்த கோபிக்கு ஒவ்வொரு நாளும் ஏமாற்றமாகத்தான் முடிகிறது.

அதாவது ராதிகாவிற்கு ஒரு பயம் வந்துவிட்டது கோபி எங்கே பாக்யாவுடன் மறுபடியும் சேர்ந்து விடுவாரோ என்ற பதட்டத்தில் ஒவ்வொரு நாளும் அவரை டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதற்காக பாக்கியா இருக்கும் வீட்டிற்கு வந்து கோபியுடன் அங்கே இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கே தினமும் போர்க்களமாக தான் இருக்கிறது. பாக்கியாவை கஷ்டப்படுத்த வேண்டும் என்று செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவர்களுடைய நிம்மதி தான் போகிறது.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

இதன் உச்சகட்டமாக தான் ராதிகா, கோபியிடம் மொத்த கோபத்தையும் காட்டுகிறார். இதனால் கோபி என்ன செய்வதென்று தெரியாமல் தினமும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி வீட்டுக்கு குடித்து விட்டு வருகிறார். இதற்கு இடையில் கோபி, ராதிகா இடம் பேசும் போது அவர் மனதில் இருந்து பாக்கியா என்ற பெயர்தான் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராதிகா ருத்ர தாண்டவம் ஆடிட்டு இருக்காங்க.

இதில் கோபி வேற எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ராதிகாவிடமே பாக்யா என்று புலம்பி கொண்டிருக்கிறார். இதை பார்த்து ராதிகா என்ன கோபி உங்களால பாக்கியாவ மறக்க முடியாதா. இன்னும் உங்க மனசுல அவங்க தான் இருக்காங்களா என்று கேட்கிறார். உடனே கோபி எதையோ சொல்லி சமாளித்து விடுகிறார். பிறகு கேண்டினில் பாக்கியவை ஏதாவது செய்து வம்புக்கு இழுக்கணும் என்று அவரை தேடி போகிறார்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

ஆனால் ராதிகா எதிர்பார்த்த அளவுக்கு அங்க எந்த பிரச்சினையும் செய்ய முடியாததால் பாக்யாவிடமிருந்து நோஸ்கட் தான் வாங்கிக் கொண்டார். இதே வீரத்துடன் பாக்கியா, வீட்டிலும் ராதிகாவை வச்சு செய்தால் கொஞ்சமாக அடங்கிப் போவார். எங்க பேசணுமோ அங்க பேசாம இப்படி அமைதியாக இருப்பது ரொம்பவே எரிச்சல் ஊற்ற மாதிரி இருக்கிறது.

அடுத்ததாக கோபி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த பொழுது அங்கே பாக்யாவும் கேன்டீன் வேலையை முடித்துவிட்டு சுடிதார் போட்டு வீட்டுக்கு வருகிறார். இதை பார்த்த கோபி அவரை ஜொள்ளு விடும் விதமாக வச்ச கண்ணு எடுக்காமல் பார்த்து ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காரு. இதை ராதிகா மட்டும் பார்த்தால் கோபியுடன் நிலைமை அதோ கெதி தான். ஆனாலும் கோபி உடைய இந்த நிலைமைக்கு காரணம் ராதிகா தான். ராதிகா எதுக்கெடுத்தாலும் கோபியுடன் சண்டை போடுவதால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ராதிகாவை வெறுத்து வருகிறார்.

Also read: அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்