புருஷனோட மல்லுக்கெட்ட போகும் ஈஸ்வரி.. அவரை தோற்கடிக்க சப்போட்டாக நிற்கும் லவ்வர்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து இறப்பிற்கு பிறகு நாடகம் ரொம்பவே தடுமாறி போய்விட்டது. இதை எப்படியாவது மறுபடியும் தூக்கி நிறுத்த வேண்டும் என்று மொத்த டீமும் படாத பாடு பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இப்போது இந்த நாடகத்துக்கு உயிரூட்டும் விதமாக மீண்டும் சுவாரஸ்யமாக கதை நகர்ந்து வருகிறது.

அதாவது குணசேகரன் சொல்றபடி வீட்டில் இருக்கும் பெண்கள் வாலாட்ட வேண்டும் என்று பிற்போக்குத்தனமாக நினைக்கிறார். ஆனால் அதையெல்லாம் நாங்கள் கடந்து வந்து விட்டோம். எங்கள் வாழ்க்கையே நாங்கள் பார்த்துக் கொள்ளும்படி அளவிற்கு திறமை எங்களிடம் கொட்டி கிடக்கிறது என்று குணசேகரன் வீட்டில் இருக்கும் பெண்கள் துணிந்து விட்டார்கள்.

அதனால் தான் குணசேகரன் தேர்தலில் வாபஸ் வாங்க சொல்லியும் ஈஸ்வரி வாங்க முடியாது என்று சொல்லிவிட்டார். அதற்கு பதிலாக நான் எலக்ஷனில் நின்னு ஜெயித்து முன்னேற நினைக்கும் பெண்களுக்கும், கஷ்டப்படும் பெண்களுக்கும் துணையாக நிற்பேன் என்று குணசேகரனிடம் சவால் விடும் அளவிற்கு களமிறங்கி விட்டார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வாங்கும் சம்பளம்.. தெனாவட்டு காட்டும் வேல ராமமூர்த்தி

இதனால் குணசேகரன் வேற வழி இல்லாமல் ஈஸ்வரியை எதிர்த்து நிற்கும்படியாக மாறிவிட்டது. ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் எலக்ஷனில் எதிரும் புதிருமாக இருப்பதால் இவர்களை பேட்டி எடுப்பதற்கு பத்திரிகையாளர்கள் வருகிறார்கள். அப்பொழுது ஈஸ்வரி மற்றும் குணசேகரன் சொல்லும் வார்த்தைகள் எதிரும் புதிருமாக இருப்பதால் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது என்று பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள்.

இதற்கு மத்தியில் கண்டிப்பாக குணசேகரன் மூஞ்சியில் கரியை பூச வேண்டும் என்பதற்காக ஈஸ்வரி தான் ஜெயிக்கப் போகிறார். இதுதான் குணசேகரனுக்கு கொடுக்கப் போகும் தரமான அடியாக இருக்கும். இந்த ஒரு வெற்றியை வைத்துக்கொண்டு அடுத்தடுத்து வாழ்வில் முன்னேறி ஜெயித்துக் காட்டி குணசேகரனை மண்ணை கவ்வ வைக்கப் போகிறார்.

ஈஸ்வரிக்கு என்னதான் ஜனனி, அப்பத்தா துணிச்சலாக சப்போர்ட் செய்திருந்தாலும், தற்போது ஜீவானந்தம் கொடுக்கும் அட்வைஸ் படி தான் ஈஸ்வரி ஒவ்வொரு வேலையும் செய்து வருகிறார். அந்த வகையில் எலக்ஷனில் வாபஸ் வாங்க கூடாது என்று ஜீவானந்தம் சொல்லியதன் மூலம் தான் ஈஸ்வரி இந்த துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறார்.  ஈஸ்வரியும் ஜீவானந்தமும் ஒன்று சேர்ந்து குணசேகரனை தோற்கடிப்பதற்கு மல்லுக்கட்ட போகிறார்கள்.

Also read: புருசன் பொண்டாட்டிக்குள் பிரச்சனையை உருவாக்கும் குணசேகரன்.. பலியாடாக சிக்கப் போகும் ஜனனி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்