சிம்புவுடன் இணைந்து பாட வாய்ப்பு கிடைத்தும் தவற விட்ட தனுஷ்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்குள் எப்போதும் ஒரு பனிப்போர் நிலவி வரும். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், விக்ரம் – சூர்யா, தனுஷ் – சிம்பு தொடங்கி தற்போது விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன் வரை இது தொடர்கிறது.

ஒருவேளை இந்த நடிகர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் எலியும் பூனையுமாகவே இருப்பார்கள். எப்போதும் சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் இடையே மோதல் நடந்து கொண்டுதான் இருக்கும். அப்படி எதிர் எதிராக இருக்கும் நடிகர்கள் தான் தனுஷ் – சிம்பு.

இவர்கள் இணைந்து நடித்தால் ரசிகர்கள் இடையே இருக்கும் பிரச்சினை தீரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அது எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை.இருப்பினும் இவர்கள் இருவரும் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் தனுஷ் அதை தவற விட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம்பெற்ற ஒரு பொறம்போக்கு என்ற பாடலை சிம்புவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடி இருந்தனர்.

ஆனால் இந்த பாடலை சிம்புவும், தனுஷும் இணைந்து பாட வேண்டியது. அப்போது தனுஷ் மரியான் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் சிக்கிக் கொண்டதால் இந்த வாய்ப்பை தவறவிட்டார். அதன் பிறகு தான் தனுஷூக்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இந்தப் பாடலை பாடியுள்ளார்.

kedi-billa-siva
kedi-billa-siva
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்