பாரதிக்கு திடீரென வந்திருக்கும் ஞானோதயம்.. உண்மையை அறிந்த ஹேமா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடர் கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போது வெண்பா ரோகித் சாரதியை பின்தொடர்ந்து அவர் கூவத்தைச் சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்கிறார். அது அப்படியே வீடியோ எடுத்த தனது அம்மா ஷாமிலிக்கு அனுப்புகிறார்.

உடனே வெண்பாவின் அம்மா அங்கு வந்து ரோகித்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். இவ்வளவு நாள் எங்களை ஏமாற்றி இருக்க, உனக்கு என் பொண்ணு கேக்குதா என ஷாமிலி திட்டிவிட்டு செல்கிறார். இதைக் பார்த்த வெண்பா ரோகித் இனிமே நம்ப வலிக்கு வரமாட்டான், பாரதியை கல்யாணம் பண்ணிக்கலாம் என்று யோசிக்கிறார்.

Also Read :படுமோசமான வேலையை பார்த்த அர்ச்சனா.. IPS ட்ரெய்னிங்கில் சிக்கிய சந்தியா

மேலும் மறுபுறம் யாருக்கும் தெரியாமல் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இத்தனை வருடம் கழித்தது இப்போதுதான் திடீரென பாரதிக்கு ஞானோதயம் வந்துள்ளது. அந்த சமயத்தில் வெண்பா போன் செய்து நாம் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட பாரதி ஒரு முக்கிய முடிவு எடுக்க உள்ளார். அதாவது லட்சுமி தனக்கு பிறந்த குழந்தை இல்லை என்று தெரிந்தால் கண்டிப்பாக வெண்பாவை திருமணம் செய்து கொள்வேன் என்று பாரதி முடிவெடுத்துள்ளார். ஆனால் டிஎன்ஏ டெஸ்டில் லட்சுமி தனக்கு பிறந்த குழந்தை தான் என்று தெரிய வர உள்ளது.

Also Read :பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கப் போகும் முதல் 8 பேர்.. களைகட்டிய சீசன்6

மேலும் ஹேமா ஒரு வீட்டுக்கு செல்கிறார். அங்கு தனது அம்மா என்று பாரதி ஒரு போட்டோவை கொடுத்தவரின் போட்டோவுக்கு மாலை போட்டு இருக்கிறது. அதைப் பார்த்தவுடன் ஹேமா அதிர்ச்சி அடைகிறார். மேலும் அங்குள்ளவர் என் பொண்ணு உயிரோட இருந்து இருந்தா கல்யாணம் ஆகி உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்திருக்கும் என கூறுகிறார்.

இவங்கள தானே நம்ம அம்மா என்று அப்பா போட்டோ கொடுத்தாரு என ஹேமா யோசிக்கிறார். மேலும் டி.என்.ஏ டெஸ்டில் பாரதியின் குழந்தை தான் லட்சுமி என்று தெரிய வர உள்ளது. இதனால் பாரதி என்ன முடிவு எடுக்கப் போகிறார் எதிர்பார்ப்பில் பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா தொடர் வர இருக்கிறது.

Also Read :மகா சங்கமத்தில் குட்டையை குழப்பிய கண்ணன்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்