பாக்யாவிற்கு ஷாக் கொடுக்கப்போகும் ராதிகா.. தலைக்கு என்ன தில்லு!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவி பாக்யாவை விட்டு பிரியும் நோக்கத்தில் அவருக்கே தெரியாமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதை வக்கீலிடம் கோபி கொடுத்துவிட்டார். இதனால் நீதிமன்றத்தில் முதல் வாய்தாவிற்காக கோபி மற்றும் பாக்யா இருவரையும் வருமாறு கடிதம் பாக்யா வீட்டிற்கு வந்திருக்கிறது.

அதை கோபி பெற்று, யாருக்கும் தெரியாமல் இவ்வளவு நாள் மறைத்திருந்த விஷயத்தை இனிமேல் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வந்திருக்கிறான். இது ஒருபுறமிருக்க ராதிகா கோபியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதால் தன்னுடைய நண்பர்களை அழைத்து கோபியை பற்றி அறிமுகம் செய்ய வேண்டும் என கெட் டு கெதர் பார்ட்டி வைக்க திட்டமிடுகிறாள்.

அந்த விழாவிற்கு ராதிகாவின் தோழியான பாக்யாவையும் அழைப்பதாக கோபியிடம் ராதிகா கூறுகிறாள். இதற்கு கோபி மறுப்பு தெரிவிக்காமல், ‘அவங்கள கூப்பிடு, அப்பதான் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும்’ என ராதிகாவிற்கு சாதகமாக பதிலளிக்கிறான்.

அத்துடன் பாக்யாவிடம் மட்டுமே ராதிகா, கோபி யார் என்பதை மட்டும் தெரிவிக்காமல் அவர்களுக்கு இடையே இருக்கும் உறவை வெளிப்படுத்தி இருக்கிறாராம். அதை பாக்யாவும் புரிந்து கொண்டதாக ராதிகா கோபியிடம் தெரிவிக்கிறார்.

ஆனால் பாக்யா அந்த நிகழ்ச்சிக்கு வந்தால் இவ்வளவு நாள் கோபி போட்டுக்கொண்டிருந்த வேஷம் கலைந்துவிடும். அத்துடன் தன்னுடைய இரண்டாவது திருமணத்தையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ராதிகாவும் கோபியை பாக்யாவிற்கு விட்டுக்கொடுக்காமல் இனி வரும் நாட்களில் கொடூரமான வில்லியாக ராதிகா மாறப் போகிறார் .

மேலும் அம்மா, அப்பா, பிள்ளைகளை எல்லாம் உதறி எறிந்துவிட்டு, அவர்கள் கவலைப்படுவதை விட ராதிகாவின் சந்தோஷம் மட்டுமே பெரிதாகத் தெரியும் கோபி, சீரியல் ரசிகர்கள் மத்தியில் படு கேவலமாக பார்க்கக்கூடிய கதாபாத்திரமாக மாறப் போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்