நாடகமாடி இயக்குனரிடம் இருந்து தப்பித்த நடிகை.. சவகாசமே வேண்டாம் என ஓடிய சம்பவம்

நடிகை ஒருவர் ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்பு குறைய தொடங்கியதால் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அதோடு பெரிய நடிகர் படம் ஒன்றில் ஐட்டம் பாடலில் ஆட வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு சம்பளமே பெரிய தொகை பேசப்பட்டிருந்தது. நடிகையும் குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டு பாடலில் நடித்து விட்டார். ஆனால் இயக்குனருக்கு நடிகை மீது கண் இருந்ததால் ஒரு நாள் அவருடன் இருக்க நடிகை சம்மதித்தார்.

ஆனால் இயக்குனரோ நடிகையின் அழகில் மயங்கி தொடர்ந்து அவரை கட்டாயப்படுத்தி இரண்டு, மூன்று நாட்கள் இருக்க வைத்திருக்கிறார். நடிகையோ சம்பளத்தை அவரிடம் இருந்து வாங்க வேண்டும் என்று வேறு வழி இல்லாமல் இருந்திருக்கிறார்.

ஆனால் இயக்குனரோ ஓவர் டார்ச்சர் கொடுக்க வேறு வழியில்லாமல் திடீரென மயங்கி விழுவது போல் நடித்து இருக்கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் பதறிப் போய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதன் பிறகு டாக்டர் நன்றாக இருக்கிறார் என்று சொன்னவுடன் அங்கிருந்து இயக்குனர் கிளம்பி விட்டாராம். நல்ல வேளை தப்பித்தோம், பிழைத்தோம் என நடிகை பெருமூச்சு விட்டாராம். மேலும் மீதி உள்ள சம்பளத்தையும் நடிகை வாங்கவே இல்லையாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்