இன்றைய காலத்தில் திரையுலகில் ஒரு நடிகை நிலையான மார்க்கெட்டை பிடிப்பது மிகவும் கஷ்டமான விஷயமாக உள்ளது. ஏனென்றால் திரையுலகை பொருத்தவரை நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. ஒரு நடிகை இல்லை என்றால் அவருக்கு பதில் குறைவான சம்பளத்திற்கு ஏராளமான இளம் நடிகைகள் நடிக்க தயாராக உள்ளார்கள்.
பிற மொழிகளில் இருந்து பல இளம் நடிகைகள் கோலிவுட் சினிமாவிற்கு படையெடுத்து வருகிறார்கள். அதனால் முன்னணி நடிகைகளுக்கு சற்று சிக்கல் ஆரம்பமாகி உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு முன்னணி நடிகை இழந்த தனது பழைய மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க கடுமையாக போராடி வருகிறாராம்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் அந்த நடிகை. ஆனால் கொரோனா தொற்று அதிகமாக இருந்த சமயத்தில் நடிகைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். அதன்பின் ஓய்வு எடுத்ததில் உடல் எடை கூடி குண்டாக மாறி விட்டார்.
நடிகைகள் அழகாக இருந்தாலே ஆயிரம் காரணம் சொல்லி தட்டி கழிப்பார்கள். இதில் உடல் எடை கூடி குண்டானால் சும்மா விடுவார்களா? அதனால் ஏற்கனவே நடிகை கைவசம் இருந்த பட வாய்ப்புகளையும் இழந்தார். எனவே இழந்த பட வாய்ப்புகளை எப்படியாவது மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நடிகை இறங்கினார்.
அந்த முயற்சி ஓரளவிற்கு கைக்கொடுத்தாலும், பட வாய்ப்புகளை பிடிக்க முடியவில்லையாம். இதனால் இழந்த பட வாய்ப்புகளை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று கடைசி ஆயுதமாக கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தூது அனுப்ப முடிவு செய்துள்ளாராம். பட வாய்ப்புகள் குறைந்தால் நடிகைகள் கவர்ச்சி போட்டோஷூட் நடத்துவதும், இதுபோன்று தூது அனுப்புவதும் வழக்கமான ஒன்று தானே. நடிகையின் இந்த முயற்சி எந்த அளவிற்கு கைகொடுக்கிறது என்பதை பார்க்கலாம்.