ரஜினி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் தன்னை ஒரு தயாரிப்பாளர் அசிங்கப்படுத்தியதாக கூறியதிலிருந்தே அவர் யார் என்பதை தெரிந்துகொள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் இருந்துவந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கே பாலச்சந்தர் என்பவரால் தமிழ் சினிமாவில் அறிவிக்கப்பட்டார். கே பாலச்சந்தர் கண்டெடுத்த முத்துக்கள் இவரும் ஒருவர். கமல் ஒரு பக்கம் நடிப்பில் கலக்கிக் கொண்டிருந்தால் ரஜினி ஒரு பக்கம் மாஸ் காட்டிக் கொண்டிருந்தார்.
ரஜினி வளர்ந்துவரும் காலகட்டங்களில் அவரை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர் ஒருவர் அவரை வேண்டுமென்றே தன்னுடைய அலுவலகத்திற்கு வர வைத்து அசிங்கப்படுத்தி ரஜினியை நடுரோட்டில் நடக்க வைத்த சம்பவத்தை கூறி மிகவும் வருத்தப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மேலும் தமிழ் சினிமாவை விட்டே உன்னை துரத்தி விடுவேன் ஜாக்கிரதை என மிரட்டியதாகவும் குறிப்பிட்டார். அதன் பிறகு அதே அலுவலகத்தின் முன்பு பாரின் வண்டி ன் பாரின் டிரைவர் என அடுத்த வருடமே போய் நின்றதாகவும் கூறிக் கெத்துக் காட்டினார்.
ஆனால் ரஜினியை மிரட்டிய தயாரிப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அதற்கான விடையை டூரிங் டாக்கீஸ் யூடியூப் உரிமையாளர் சித்ரா லட்சுமணன் சமீபத்திய வீடியோ ஒன்றில் யார்? என்பதை தெரிவித்துள்ளார்.
அந்த தயாரிப்பாளரின் பெயர் சிவசுப்பிரமணியம். அம்மையார் ஜெயலலிதா நடித்த கணவன் மனைவி உள்ளிட்ட பல படங்களை அவர் தயாரித்துள்ளதாகவும், அவர்தான் ரஜினியை அசிங்கப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 35 ஆண்டு கால வினாவிற்கு கடைசியில் விடை கிடைத்துவிட்டது.