44 வயதில் இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை தேடும் விக்ரம் பட நடிகை

விக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தன்னுடைய 42 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் காதை கடித்து இன்றைய ட்ரென்டிங் ஆகியுள்ளது.

சினிமாவை பொறுத்தவரையில் விவாகரத்தை இரண்டாவது திருமணம் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் உடனடியாக விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருவரை தேடி வருகின்றனர்.

அந்தவகையில் 1998ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான கண்களின் வார்த்தைகள் என்ற படத்தில் நடித்தவர் தான் நடிகை பிரேமா. கன்னட நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

அதுமட்டுமில்லாமல் 2003 ஆம் ஆண்டு வெளியான தாயே பராசக்தி என்ற படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக 2004 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் அழகேசன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதோடு தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டவர்தான்.

அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு ஜீவன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

தற்போது 44 வயதை எட்டியிருக்கும் பிரேமா இனிமேலும் தனிமையில் வாழ முடியாது என மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறாராம். வசதியான தொழிலதிபர் மாப்பிள்ளை என்றால் உடனடியாக ஓகே சொல்ல ரெடியாக இருக்கிறார்.

actress-prema-cinemapettai
actress-prema-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்