கருணாஸ் நடித்த சந்தாமாமா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் ஸ்வேதா பாசு. ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி தேசிய விருது பெற்றாலும் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமாக வலம் வந்தார்.
திடீரென பட வாய்ப்புகள் குறையவே வேறு வழியில்லாமல் தனது ஆடம்பர வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரத்தை தொடங்கினார். எதிர்பாராவிதமாக போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். பணத்துக்காகவே இந்த தொழிலுக்கு வந்ததாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
சரி ஸ்வேதா திருந்தி விட்டார் என நினைத்த அவரது காதலர் ரோஹித் மிட்டல் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்வேதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.
இதைப்பற்றி நடிகை ஸ்வேதாவிடம் கேட்டபோது, இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் இந்த முடிவு எடுத்தோம் எனவும், திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் சில கருத்துகளில் ஈடுபாடு இல்லை என்பதாலும் இந்த விவகாரத்து முடிவை ஏற்றுக் கொண்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்துக்குப் பிறகு கவலையில் இருப்பார் என நினைத்துக் கொண்டிருக்கையில் ஸ்வேதா அடிக்கடி நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தார். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் எங்கும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்வேதா, இதுவரை தனிமையில் இருந்தது இல்லை எனவும் தற்போது மனநலம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக தினமும் வீடியோகால் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.