பெட்டியை விட்டு எரிந்த பாக்யா.. கோபிக்கு மொத்தமாக ஆப்பு வச்ச குடும்பம்

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் 50 வயதில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்கும் பொறுப்பிலிருக்கும் கோபி, கொஞ்சம் கூட குடும்பத்தை பற்றி யோசிக்காமல் கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்வதற்காக, 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார்.

தவறு எல்லாவற்றையும் கோபி செய்துவிட்டு தற்போது கடைசியில் பாக்யாவின் மீது எல்லா பழியையும் தூக்கி போடுவது மட்டுமல்லாமல் விவாகரத்துக்குப் பிறகு வீட்டில் எந்த உரிமையும் இல்லை என அவரை வீட்டை விட்டு துரத்துகிறார் கோபி.

விவாகரத்து ஆன பிறகு வீட்டிற்கு வந்த பாக்யா, அமைதியாக மாடிக்குச் சென்று ஒரு பெட்டியில் துணிமணிகளுடன் கீழே இறங்கி வருகிறார். ஒருவேளை அவர் உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்தப் பெட்டியை விட்டு வெளியே எறிகிறார்.

அதில் கோபியின் துணிகள் இருக்கிறது. ‘பண்ற தப்பு எல்லாம் ஆம்பளைங்க பண்ணிட்டு. பொம்பளைங்களை தண்டனை அனுபவிக்க சொல்கிறீர்களா!’ என ருத்ர தாண்டவம் ஆடும் பாக்யா, கோபியை ‘வீட்டை விட்டு வெளியே போ’ என விரட்டுகிறார்.

இதற்கு கோபியின் அப்பாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து, கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். ‘ரொம்ப திமிரு ஏறிருச்சா பாக்யா’ என கோபி பாக்யாவை திட்டினாலும் குடும்பமே பாக்யாவிற்கு துணையாக நிற்பதால் வேறு வழி இல்லாமல் பெட்டியில் துணியை எடுத்து வைத்துக்கொண்டு பெட்டியும் கையுமாய் வீட்டை விட்டு கோபி வெளியேறுகிறார்.

மூச்சுக்கு முன்னூறு தடவை வீட்டை விட்டு வெளியே போ என பாக்யாவை திட்டிய கோபிக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்யாவை சீரியல் ரசிகர்கள் மெச்சுகின்றனர். நாளுக்கு நாள் பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிப்பதால் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களை இஷ்டமான சீரியலாக மாறிவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்