காதல் படத்தின் முதல் ஹீரோ நான்தான், மிஸ் பண்ணிட்டேன்.. வருத்தப்படும் சங்கர் பட நடிகர்

ஷங்கர் தயாரிப்பில் பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய இந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்டு புலம்பியுள்ளார் பிரபல நடிகர்.

பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காதல். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகவே படம் பட்டையை கிளப்பியது. மேலும் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாகவே இருந்தது.

நல்ல வசூல் மழை பொழிந்த இந்த படத்திற்கு பிறகு பரத் தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி நடிகராக மாறினார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இப்படி சூப்பர் ஹிட்டடித்த காதல் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் என்பவர்தானாம். சங்கர் 2003 ஆம் ஆண்டு இயக்கிய பாய்ஸ் படத்தில் ஐந்து நடிகர்களில் ஒருவராக நடித்திருந்தார்.

அந்த படத்தில் மணிகண்டனை தவிர சித்தார்த், நகுல், பரத், இசையமைப்பாளர் தமன் என அனைவருமே தற்போது பிரபலங்களாக மாறிவிட்டனர். ஆனால் மணிகண்டன் மட்டும் இன்னமும் தனக்கேற்ற சரியான படம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும் போது தான் காதல் படத்தில் முதலில் ஹீரோவாகத் தான் நடிக்க இருந்ததாகவும், ஆனால் அப்போதெல்லாம் சினிமா பற்றிய புரிதல் இல்லாமல் அந்த படத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

manikandan-actor-cinemapettai
manikandan-actor-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்