உடம்பு புல்லா திமிரு.. துணிச்சலாக விவாகரத்து கொடுத்த பாக்யா, ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராதிகா

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கணவர் கோபிக்கு விவாகரத்து கொடுத்தபின் பாக்யா அதற்காக கொஞ்சம்கூட வருத்தப்படாமல் மிகவும் தன்னம்பிக்கை நிறைந்தவராய் வேறொரு பாக்யாவாக தெரிகிறார்.

ஏனென்றால் கோர்ட்டு வாசலில் இருந்து கிளம்பி போன பாக்யா ஹோட்டலில் எழிலுடன் பிரியாணி, சிக்கன், மட்டன், மீன் என வகைவகையாய் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார். மறுபுறம் பாக்யா தன்னை நீதிமன்றத்தில் வைத்து அவமானப் படுத்தியதால் தாங்கமுடியாமல் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் பாக்யா தான் விவாகரத்து வாங்கியது போல் சித்தரித்து தன்னையே நியாயப்படுத்துகிறார்.

‘உச்சந்தலை முதல் நுனி கால் வரை உடல் முழுவதும் திமிரு. வீட்டில் இருப்பவர்களின் பேச்சிற்கு கொஞ்சம்கூட மதிப்பு கொடுக்காமல் திமிருடன் கோட்டிற்கு வந்து என்னை விவாகரத்து செய்வதாக நீதிபதியிடம் தெளிவாகச் சொல்கிறார்.

இன்னொரு வாழ்க்கைக்கு பாக்யா தயாராகி விட்டார்’ என கோபி, வாய்கூசாமல் செய்த தப்பை எல்லாம் அவரே செய்து விட்டு இப்போது எல்லா தப்பையும் பாக்யா மீது போடுகிறார். கோபி பத்த வச்சு நெருப்பு, தற்போது பாக்கியலட்சுமி குடும்பத்தையே தீக்கிரையாக்கியது.

அதன்பிறகு கோபி, ராதிகா வீட்டிற்கு சென்று தனக்கு விவாகரத்து பெற்றதைக் காண்பித்து, தன்னை ஏற்றுக்கொள்ளும்படி சொல்கிறார். ராதிகாவும் வழக்கறிஞரிடம் குறுக்கு விசாரணை போட்டு, பாக்யாவிற்கும் கோபிக்கும் விவாகரத்து ஆகி விட்டதா என கேட்டு தெரிந்து கொள்கிறார்.

பாக்யா கோபியின் வாழ்க்கையில் இருந்து விலகியதால் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் எந்த தவறும் இல்லை என ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் வற்புறுத்துவதால், அது சரியான முடிவுதான் என ராதிகாவும் தன்னுடைய மகளுக்காக கோபியை திருமணம் செய்து கொண்டு, தன்னுடைய ஆட்டத்தை காட்டப் போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்