அந்த சம்பவத்துக்கு அப்புறம் ஆளே மாறிய நடிகை.. இது தான் காரணமா.?

ஆனந்தமான நடிகைக்கு கிடைப்பது எல்லாமே ஐட்டம் கேரக்டர்கள் தான். இருந்தாலும் அதில் நடித்து வந்த நடிகை சில வருடங்களுக்கு முன்பு பெரிய பிரச்சனையை சந்தித்தார்.

சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இருந்த அவருக்கு அப்போதுதான் சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் பப் பார்ட்டி என சுற்றிய நடிகைக்கு விபத்து ஒன்று நடந்தது.

அதையடுத்து எப்படியோ கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நடிகை உடனே சோசியல் மீடியாவில் பிஸியானார். வழக்கம் போல அரைகுறை உடையில் போட்டோஷூட் செய்து வெளியிட ஆரம்பித்தார்.

அதை தொடர்ந்து நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டதாக ஒரு தகவலும் பரவ ஆரம்பித்தது. இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் கூட நடிகை பளிச்சுன்னு இருக்கிறார்.

நிச்சயம் அழகை பாதுகாக்க இவர் ஏதோ பட்டி டிங்கரிங் செய்திருக்கிறார் என திரை உலக வட்டாரத்தில் ஒரு புரளி கிளம்பி உள்ளது. இதனால் நடிகை இப்போது செம அப்செட்டில் இருக்கிறாராம்.

ஆரம்பத்தில் இதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது இது நடிகையை தேடி வரும் வாய்ப்புகளையும் குறைக்கிறது. இதனால் கடுப்பாகும் நடிகை அதெல்லாம் இல்லை என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்