45 வயதில் சகலமும் அனுபவித்த நடிகர்.. திருமணத்திற்கு மட்டும் சொல்லும் நோ

பிரபல நடிகர் சினிமாவுக்கு வந்த புதிதில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்திருந்தார். கண்டிப்பாக இவர் டாப் நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு காரணம் அவர் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்கானவர்.

அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் சேர்ந்து சுற்றுவது, கும்மாளம் போடுவது என நாளுக்கு நாள் அவருடைய அட்டூழியம் அதிகமாகிக் கொண்டே போனது. மேலும் அவர் சின்சியராக காதலித்தாலும் அது சில வருடங்கள் கூட நீடிக்க வில்லை. இதன் பிறகு எதுக்கு பொண்டாட்டி என்று அவரே முடிவுக்கு வந்து விட்டார்.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

அதாவது 45 வயதுக்குள்ளயே சகலமும் நடிகர் அனுபவித்து முடித்து விட்டார். இனிமேல் திருமணம் என்று ஒரு பந்தத்திற்குள் போனால் அது நமக்கு டார்ச்சர் ஆக ஆகிவிடும். அதாவது நினைத்த நேரத்தில் நினைத்த பெண்ணுடன் இருக்க முடியாது. கண்டிப்பாக மனைவி என்று ஒருவர் வந்தால் நடிகருக்கு கால் கட்டு போட்டி விடுவார்.

ஆகையால் இனியும் திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு நடிகர் வந்துவிட்டார். ஆனால் கல்யாணம் வேண்டாம் என்பதற்கு நடிகர் சப்பக்கட்டு கட்டி வருகிறார். அதாவது உண்மையான புரிதல் இருந்தால் மட்டும்தான் திருமணம் என்ற பந்தத்தில் இணைய வேண்டும். இல்லையென்றால் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிவதற்கு எதற்கு கல்யாணம் என்று கூறி வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இப்போது பேச்சுலர் லைஃப் தனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆகையால் இருக்கிற வரைக்கும் நன்றாக அனுபவித்துவிட்டு செல்ல வேண்டும் என்று நடிகர் கூறி இருக்கிறார். எனவே நடிகர் இனியும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்கும் திட்டத்தில் தான் இருக்கிறார்.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்