கோட் படத்தைப் பார்த்து அஜித் வயிரெறியனும்.. தீராத பகையை கக்கும் வெங்கட் பிரபு

Ajith want to Upset after Seeing GOAT: வெங்கட் பிரபு கடைசியாக எடுத்த படம் கஸ்டடி. சிம்பு நடித்த மாநாடு படத்திற்கு பின் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவர் இயக்கிய படங்கள் எதுவும் ஓடவில்லை. வெப் சீரியஸ் பக்கம் சென்றால் கூட இவருக்கு தகுந்த கதை அமையவில்லை .

காத்திருந்த கொக்கிற்கு கிடைத்த இறையை போல, விஜய் இவரை அழைத்து கொடுத்த வாய்ப்புதான் இப்பொழுது “கோட்” படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்களை வைத்து ஒரு செம மாஸ் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு.

ஆனால் “கோட்” படத்திற்கு முன்னர் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் இவருக்கு கால் சீட் கொடுத்து விட்டார். ஆனால் வெங்கட் பிரபு எதிர்பார்த்த விஷயம் ஒன்று இன்று வரை நடக்காமல் இருக்கிறது.

தீராத பகையை கக்கும் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு அஜித்தை வைத்து எடுத்த படம் மங்காத்தா. இந்த படத்துக்கு பின்னர் நீண்ட நாட்களாக இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம். வெங்கட் பிரபு அஜித்திற்காக பல கதைகள் ரெடி பண்ணி வைத்தும் இவர்கள் கூட்டணி அமையவில்லை. அதற்கு காரணம் அஜித் தான் என்கிறார்கள் வெங்கட் பிரபு தரப்பு .

அஜித் மங்காத்தா படம் போல் தனக்கு ஒரு ஹிட் வேண்டும் என்று பல நாட்களாக தன்னிடம் கேட்டதாகவும், கதை ரெடி பன்னிய பின் வெங்கட் பிரபு அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அஜித் அவரைக் கண்டு கொள்ளவில்லையாம்.

இதனால் வெங்கட் பிரபு அஜித் மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகிறாராம். இந்த “கோட்” படத்தை பார்த்து நிச்சயமாக அவர் வயிறு எரிய வேண்டும் , அந்த அளவிற்கு இந்த படம் அமைய வேண்டும் என தனது நெருங்கிய நட்பு வட்டாரத்திடம் கூறி வருகிறாராம் வெங்கட் பிரபு .

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்