50 படங்கள் நடித்தும் பிரயோஜனம் இல்ல.. வரலட்சுமிக்கு போட்டியாக கல்யாணத்துக்கு ரெடியான முத்திப்போன நடிகை

There is no use in acting in 50 films: எத்தனையோ ஹீரோயின்கள் இளமைப் பருவத்தை தாண்டிய நிலையிலும் கல்யாணத்தில் ஆர்வம் இல்லாமல் தனிமரமாகவே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இன்னும் சில நடிகைகள் கல்யாணத்தை பண்ணாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் இன்னும் கொஞ்சம் பேர் சினிமாவில் பெருசாக சாதிக்க முடியவில்லை. அதனால் கல்யாணத்தை-யாவது பண்ணிக் கொள்ளலாம் என்று குடும்ப வாழ்க்கையை தேடி போகிறார்கள்.

இதில் வரலட்சுமி சரத்குமார் எந்த ரகம் என்றே சொல்ல முடியவில்லை. ஏனென்றால் இவருடைய நடிப்பு எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு தரமாக நடிக்கக்கூடிய திறமை இருக்கு. ஆனாலும் இவரால் முன்னணி ஹீரோயின் என்று சொல்லும் அளவிற்கு பெயர் எடுக்க முடியவில்லை. இதனால் இப்பொழுது 39 வயது ஆனதும் கல்யாணத்திற்கு தயாராக இருக்கிறார்.

அதுபோல இவரை மாதிரி இன்னொரு நடிகையும் இவருக்கு போட்டியாக கல்யாணத்துக்கு தயாராகி விட்டார். கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்தும் தற்போது வரை இவருக்கான ஒரு பெயரை சம்பாதிக்க முடியவில்லை. அந்த வகையில் வயசும் இளமையும் தாண்டி போன நிலையில் தற்போது முத்திப்போய் விட்டதால் இப்பொழுதுதான் திருமண பந்தத்தில் இணைவதற்கு முடிவெடுத்து இருக்கிறார்.

Also read: 38 வயதில் 2-வது மனைவியாகும் வரலட்சுமி.. வைரலாகும் மாப்பிள்ளையின் முதல் மனைவி, மகள் புகைப்படங்கள்

அந்த நடிகை வேறு யாரும் இல்லை ரெஜினா கசாண்ட்ரா. இவர் “கண்ட நாள் முதல்” என்ற படத்தின் மூலம் ஒரு சின்ன கேரக்டரில் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். அதன்பின் ஹீரோயினாக “அழகிய அசுரா” படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பரிச்சயமானார்.

அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்தும் இவருக்கான ஒரு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. அதனால் தமிழில் வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். அங்கேயும் பெருசாக சொல்லும் படி வாய்ப்பில்லை என்றதும் தற்போது கல்யாணத்திற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் வருகிற ஜூலை மாதம் திருமணம் நடைபெற போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இதற்கு இடையில் அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படத்திலும், பார்டர் மற்றும் பிளாஷ்பேக் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இப்படங்களிலும் இவருக்கு பெருசா முக்கியத்துவம் இல்லாததால் தான் திருமணத்தை பண்ணிக் கொள்ளலாம் என்ற முடிவு எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் இவருடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: கட்டுமஸ்தான சரத்குமாருக்கு போட்டியா வரும் புது மாப்பிள்ளை.. மோசமான பாடி பில்டர் வலையில் சிக்கிய வரலட்சுமி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்