தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக விளங்கும் தல அஜித் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி, அவருடைய படங்கள் வெளியாகும் போது திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடுகின்றனர். இதேபோன்று தளபதி விஜய்க்கும் தனி ரசிகர் கூட்டம் இருப்பதால் தல, தளபதி இருவரும் அரசியலில் ஈடுபட வேண்டும் என அவர்கள் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
ஏற்கனவே தளபதி விஜய் அரசியலில் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலம் நுழைய ஆயத்தமாகி இருக்கும் நிலையில், அடுத்தது தல அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் இருவரும் அரசியலில் ஆர்வம் காட்டிக் கொண்டிருப்பதால், தல அஜித்தும் இவர்களுடன் இணைந்து இருக்கிறாரா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
அதாவது நேற்று சமூக வலைதளங்களை அல்லோல பட்டது காரணம் அஜித்-ரஜினி சந்திப்பு. இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி அனைத்து பத்திரிக்கைகளும் வெளிவந்தது. இவர்களது சந்திப்பிற்கு காரணம் அஜித் அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று சொல்லப்பட்டது.
ஆனால் நேற்றைய தினத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் ரஜினியை சந்தித்தனர். அதனுடன் அஜித்தும் சந்தித்ததாக ஒரு போட்டோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவேளை நடிகர் சங்க கட்டிடம் கட்ட இருவரும் முன் வந்துள்ளனர் என்ற ஒரு பேச்சு அடிபட்டது.
ஆனால் உண்மை அது இல்லை இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. இரண்டு நாட்கள் முன்னர் கமல் ரஜினியை சந்தித்துள்ளார். இருவரும் படம் எடுப்பதற்காக ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதாவது கமலின் தயாரிப்பில் ரஜினி ஒரு படம் நடிக்க இருக்கிறார். அதற்காக இருவரும் சந்தித்து கொண்டனர்.
இப்பொழுது ஒரு போட்டோ வெளிவந்துகொண்டிருக்கிறது அது ரஜினியும் கமலும் சந்தித்த போட்டோ. அதை தத்துரூபமாக கமல் இருக்க வேண்டிய இடத்தில் அஜித்தை வைத்து ஃபோட்டோஷாப் செய்து விட்டனர். இந்த போட்டோ தான் இப்பொழுது சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது.