சமந்தா, உங்க கூட தப்பு பண்ண ஆசைய இருக்கு.. ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த பதிலடி

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்துக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான ஓ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி வருகிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் இந்தியில் அதிக வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன அதுமட்டுமில்லாமல் சமந்தாவுக்கு சம்பளமும் 5 கோடி வரை கொடுக்க தயாராக இருக்கின்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு பெரும்பாலும் நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்கள் பக்கம் வர மாட்டார்கள். ஆனால் சமந்த அதற்கு அப்படியே எதிர்மறையாக தினமும் சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு பதிவை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார் சமந்தா. அப்போது ரசிகர் ஒருவர் இனப்பெருக்கம் எப்படி செய்வது உங்களுடன் செய்ய ஆசையாக இருக்கிறது என எக்குத்தப்பான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தா இந்த வார்த்தையை கூகுளில் தேடிப் பாருங்கள், உங்களுக்கான விடை கிடைக்கும் என கூலாக பதிலடி கொடுத்துள்ளார். இப்போதும் இந்த மாதிரி இடக்கு முடக்கான கேள்விகளுக்கு நடிகைகள் கொஞ்சம் கோபப்பட்டு வார்த்தைகளை வீசி விடுவார்கள். ஆனால் சமந்தா பக்குவமாக கையாண்டது பலருக்கும் பிடித்துள்ளது.

samantha-reply
samantha-reply
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்