அடுத்தடுத்து 9 புத்தம்புது சீரியல்கள்.. அதிரடியாக போட்டி போடும் டாப் சேனல்கள்!

சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காகவே டாப் சேனல்கள் அனைத்தும் மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னிலையில் ஒரு சேனலில் புதிய சீரியல் அல்லது புத்தம் புது நிகழ்ச்சி ஏதாவது துவங்கப்பட்ட அவனுடைய டிஆர்பி ரேட்டிங்கிற்க்கு பங்கம் வந்துவிடும் என்று போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் தற்போது 9 புத்தம்புது சீரியல்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. தெலுங்கு மற்றும் கன்னடத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த காவியாஞ்சலி தற்போது சன் டிவியில் தமிழில் நந்தன், ப்ரீத்தி இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் ‘காவியாஞ்சலி’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது.

அடுத்ததாக விஜய் டிவியின் ‘வைதேகி காத்திருந்தாள்’. இந்த சீரியலில் கதாநாயகனாக சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜன் நடிக்கவுள்ளார். அதேபோல் கதாநாயகியாக ஆயுத எழுத்து சீரியலின் கதாநாயகி சரண்யா நடிக்கவுள்ளார். மேலும் இந்த சீரியலில் லதா உள்ளிட்ட பலரும் ஒப்பந்தமாகி உள்ளனர்.

மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா கதாநாயகியாக நடிக்க உள்ள ஈரமான ரோஜாவே சீரியல் இன் இரண்டாவது பாகம் துவங்கப்பட உள்ளது. அடுத்தபடியாக சன்டிவியின் எதிர்நீச்சல், அதேபோல் ஜீ தமிழில் ‘பேரன்பு’, ‘தெய்வம் தந்த பூவே’ போன்று சீரியலும் ஒளிபரப்ப உள்ளது. ராஜ் டிவியின் ‘கீதாஞ்சலி என்ற சீரியல் புதிதாக துவங்கப்பட உள்ளது.

மேலும் கலர்ஸ் தமிழில் ‘வள்ளி திருமணம்’ என்ற சீரியலில் கதாநாயகியாக யாரடி நீ மோகினி சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா நடிக்கவுள்ளார். அத்துடன் ஜீ தமிழில் மேலும் ஒரு புத்தம் புது சீரியல் துவங்கப்பட உள்ளது. இதில் கதாநாயகியாக திருமணம் நாடகத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அஞ்சன் நடிக்க உள்ளார். இந்த சீரியலுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை

எனவே சின்னத்திரையில் ஒளிபரப்பட உள்ள இந்த 9 புது சீரியல்களில், ஒருசில சீரியல்களின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை உள்ளது. அதை போல் இன்னும் ஒரு சில சீரியல்களில் ப்ரோமோ விரைவில் வெளியாகும் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்த உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்