Sivakarthikeyan: வெங்கட் பிரபுவை நம்ப வைத்து காலை வாரிய சிவகார்த்திகேயன்.. சோழி முடிந்த 100 கோடி

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம் கண்டிப்பாக ஒரு என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும் என்று மக்கள் நம்பி போய் பார்ப்பார்கள். அதனாலயே SK நடிக்கும் படங்கள் நஷ்டம் ஏற்படாத வகையில் ஓடிவிடும். இந்த ஒரு விஷயம்தான் இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தேவையானது.

அதனால் தொடர்ந்து சிவகார்த்திகேயனை தேடி வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் அமரன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி இருக்கிறது. இதற்கு அடுத்து Sk 23வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கப் போகிறார்.

இது மட்டுமில்லாமல் ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் கூலி படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ தோற்றத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார். இதை எல்லாம் முடித்துவிட்டு வெங்கட் பிரபு கூட்டணியில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு சம்மதத்தை தெரிவித்திருந்தார்.

வெங்கட் பிரபுவை ரிஜெக்ட் செய்த Sk

அதாவது இப்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைப்பதாக இருந்தது. இந்த கூட்டணியில் உருவாகும் படத்தை சத்தியஜோதி நிறுவனம் தயாரிப்பதற்கு தயாராக இருந்தார்கள். அத்துடன் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கலாம் என்று பேச்சுவார்த்தை போனது.

இது சம்பந்தமான ஒன்லைன் ஸ்டோரியை SK விடம் வெங்கட் பிரபு சொல்லிய பொழுது அவருக்கு கதை ரொம்பவே பிடித்து போய்விட்டது. உடனே நாம் இருவரும் சேர்ந்து இந்த படத்தை பண்ணலாம் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக வெங்கட் பிரபு படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் ரெடி பண்ணி விட்டாராம்.

இதைப்பற்றி சிவகார்த்திகேயன் இடம் வெங்கட் பிரபு சொல்லிய பொழுது இப்போ அந்த கதை வேண்டாம் வேறு ஏதாவது கதை ரெடி பண்ணி கொண்டு வாங்க என்று திருப்பி அனுப்பி விட்டாராம். இதை கேட்டதும் வெங்கட் பிரபுவுக்கு ஒண்ணுமே புரியவில்லை.

ஆரம்பத்தில் எல்லாத்துக்கும் தலையை ஆட்டிவிட்டு 100 கோடி பட்ஜெட்டையும் உறுதி பண்ணிய நிலையில் இப்படி நம்ப வைத்து காலை வாரி விட்டாரே என்ற கடுப்பில் வெங்கட் பிரபு எதுவும் சொல்லாமல் போய்விட்டார். எஸ்கே எடுத்த இந்த முடிவுக்கு பின்னாடி இவருடைய நண்பர் சிபி சக்கரவர்த்தி இருக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

ஏனென்றால் சிபி சக்ரவர்த்திக்கு தற்போது எந்த வித வாய்ப்பும் இல்லாததால் அவருடன் கூட்டணி வைப்பதாக பேச்சுவார்த்தை அடிபட்டது. அதனால் தான் வெங்கட் பிரபுவை வேண்டாம் என்று ஒதுக்குவதற்கு இப்படி ஒரு காரணத்தை சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்