ஒரே மாதத்தில் 4 படங்கள்.. தெறிக்கவிடும் விஜய் சேதுபதி

எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் சேதுபதி .எங்கவீட்டுப்பிள்ளை என்று தாய்மார்கள் கூறும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை நடிப்பவர் விஜய் சேதுபதி. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை கனகச்சிதமாக நடிப்பார். அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சேதுபதி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பாடகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்டவர். ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றிய விஜய்சேதுபதி தன்னுடைய கடின உழைப்பாலும் எதார்த்தமான நடிப்பாலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தற்போது இவருடைய நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம் ,கடைசி விவசாயி,அனபெல் சேதுபதி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் ,இடம் பொருள் ஏவல் போன்ற திரைப்படங்கள் முடிவடைந்து வெளியீட்டிற்காக தயார் நிலையில் உள்ளது. துக்ளக் தர்பார் திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியாக உள்ளது . அதை தொடர்ந்து மறுநாளே OTTயில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

vijaysethupathi-cinemapettai
vijaysethupathi-cinemapettai

மேலும் லாபம் திரைப்படமும் செப்டம்பர் 9 தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து அனபெல் சேதுபதி திரைப்படமும் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ள கடைசி விவசாயி  திரைப்படமும் செப்டம்பர் மாதம் வெளிவர போவதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஒரே மாதத்தில் விஜய் சேதுபதியின் நான்கு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப் போகிறது என்று சொல்லவேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்