கிளி மாதிரி மனைவி இருக்கும் போது கள்ளத் தொடர்பு வைத்த நடிகர்.. கோபப்பட்ட 4வது பொண்டாட்டி

என்னதான் கிளி மாதிரி மனைவி அமைந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி வைத்துக்கொள்வது ஆணின் வழக்கம் தானே என்ற பழமொழிக்கு ஏற்ப சம்பவம் தான் சமீபத்தில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் மம்முட்டி நடித்த விஷ்வ துளசி என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அம்பிலி தேவி. ஏற்கனவே சில வருடங்கள் மலையாளத்தில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு இதுதான் முதல் படம்.

இருந்தாலும் தற்போது மலையாளத்தில் தான் செம ஃபேமஸான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த அம்பிலி தேவி தற்போது சீரியலில் பல வாய்ப்புகள் வந்ததால் அங்கே சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சீதா என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது உடன் நடித்த ஆதித்தியன் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். ஆதித்தனுக்கு இவர் நாலாவது மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதித்யன் நான்காவதாக அம்பிலி தேவியை திருமணம் செய்து கொண்டாலும் வேறு ஒரு பெண்ணுடன் சமீபகாலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக நடிகை அம்பிலி தேவி சமீபத்தில் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்த போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்த சில மணி நேரங்களிலேயே அவர் ஜாமினில் வெளிவந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்பிலி தேவியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ambili-devi-aadityan-cinemapettai
ambili-devi-aadityan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்