விஷாலை ஏமாற்றிய ஆர்பி சௌத்ரி.. வழுக்கும் பஞ்சாயத்து, முறைத்துக் கொள்ளும் நடிகர்கள்

சமீபகாலமாக விஷால் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாகத்தான் இருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பஞ்சாயத்து. தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டவர் தற்போது தலையில் துண்டு போடும் அளவுக்கு ஆகிவிட்டது.

பேசாமல் நடிகராகவே இருந்திருந்தால் விஷாலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேவையில்லாமல் நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பதவிகளுக்காக ஆசைப்பட்டு தற்போது பலமாக சிக்கி தவித்து வருகிறார்.

விஷால் சக்ரா படம் ரிலீசுக்காக தமிழ் சினிமாவின் மிகப் பெரிய தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியிடம் மூன்று கோடி ரூபாய் கடனாக வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது. எப்போதுமே கடன் கொடுக்கும்போது ஒரு பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்வது வழக்கம்.

சக்ரா படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த போதும் அந்த படத்திற்கான வட்டியும் முதலும் திருப்பிக் கொடுத்து விட்டாராம் விஷால். ஆனால் தற்போது வரை உறுதிப்படுத்தப்பட்ட பத்திரத்தை ஆர்பி சவுத்ரி தராமல் இழுத்தடித்துள்ளார்.

இதனால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளான விஷால் தற்போது அவர் மீது புகார் அளித்துள்ளாராம். அதில் பணம் கொடுத்த பிறகும் தன்னுடைய உறுதி பத்திரத்தை திரும்ப கொடுக்க மறுக்கிறார் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஆர்பி சவுத்ரியின் மகன்களான ஜித்தன் ரமேஷ், ஜீவா, விஷால் ஆகிய மூவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். சமீபகாலமாக விஷால் தனது நெருக்கமான பல நண்பர்களை தன்னுடைய அவசர புத்தியால் இழந்து வருகிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

vishal-rb-choudary-cinemapettai
vishal-rb-choudary-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்