இயக்குனரை நம்பி மோசம் போன இளம் நடிகை.. பத்து காசுக்கு பிரயோஜனமில்லையாம்

யாருக்குமே சினிமாவில் முதல் படத்திலேயே பெரிய இடத்திற்கு செல்வது அரிதான விஷயம். ஆனால் அந்த இளம் நடிகைக்கு இது அசால்டாக நடந்தது. நடித்த முதல் படத்திலேயே உச்ச நடிகருடன் நடித்து கொண்டாடப்பட்டார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவின் எதிர்காலம் இவர்தான் என பிரபல இயக்குனர் ஒருவர் ஏற்றிவிட இவரும் அந்த இயக்குனரை நம்பி தனக்கு மீண்டும் பட வாய்ப்பு தருவார் என பல வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறாராம்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்ற பாட்டை போட்டு கேட்காத குறைதானாம். அந்த அளவுக்கு அந்த இயக்குனரை நம்பி மோசம் போய் விட்டதாக தன்னுடைய வட்டாரங்களில் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

அந்த இயக்குனருக்காக நான் என்ன எல்லாம் செஞ்சேன், அவர் இப்படி பண்ணுவாருன்னு நினைச்சுக்கூட பாக்கல என செம அப்செட்டாம் இளம் நடிகை. அந்த இயக்குனரிடம் சண்டை போட்டால் வருங்காலத்தில் வரும் வாய்ப்பு போய்விடுமே என மௌனம் காத்து வருகிறார்.

ஆனால் எப்போது வெடிப்பேன் என்று தெரியாது என தன்னுடைய வட்டாரங்களில் கூறிக் கொண்டிருக்கும் அந்த நடிகை தற்போது இவரை நம்பினால் வேலைக்கு ஆகாது என தன் மற்ற சில இயக்குனர்களிடம் பட வாய்ப்பு கேட்டு அடிபோட்டுக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் நீங்க பெரிய ஹீரோயின் என சொல்லி சொல்லியே இவரை ஓரம் கட்டுகிறார்களாம். புதுமுக நடிகராக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்கள் நடிக்கிறேன் என கேட்டால், நீங்க பெரிய நடிகருக்கு ஜோடி போட்டுட்டு எப்படி சின்ன நடிகரோட நடிக்க முடியும் எனவும் சங்கடப்படுத்தி விடுகிறார்களாம். பாவம், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் அந்த நடிகை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்