கதாநாயகி டாட்டா காட்டியதால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்.. 200 எபிசோடு கூட தாக்கு பிடிக்கவில்லை

Vijay Tv Serial: பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துவிடும். ஆனாலும் டிஆர்பி ரேட்டிங் படி சன் டிவியை விட ஒரு படி பின்னாடி தான் இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியை போல மதியம் மற்றும் சாயங்காலம் என்று பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

அப்படி மதிய வேலையில் வரும் ஒரு சீரியல் அவசர அவசரமாக தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. அதாவது கிழக்கு வாசல் என்ற சீரியல் மூலம் எஸ்ஏ சந்திரசேகர், சாமியப்பன் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இந்த நாடகம் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு வந்ததால் நாடகத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் போய்விட்டது. அத்துடன் இதில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மா இந்த கதை பிடிக்காததாலும், அவர் வேறு ஒரு விஷயத்தில் பிசியாக இருப்பதால் இந்த நாடகத்திற்கு கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டார்.

இதனால் கொஞ்சம் மாதமாகவே இந்த நாடகத்துக்கு அவர் வர முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் எப்படியாவது சமாளித்து விடலாம் என்று புதுப்புது கேரக்டரை கொண்டு வந்து நாடகத்தின் கதையை மாற்ற ஆரம்பித்தார்கள். ஆனால் அதுவும் மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது. அந்த வகையில் சண்முகத்தின் கேரக்டரை டபுளாக கொண்டு வந்து கதையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

ராடன் மீடியா எடுத்த முடிவு

கடைசியில் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக இணைந்து நிற்கும் வேளையில் கதாநாயகி நேரில் வராமல் போன் மூலம் பேசுகிற மாதிரி காட்சிகள் அமைத்து இந்த நாடகத்திற்கு டாட்டா போடப் போகிறார். இந்த நாடகம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 எபிசோடு கூட ஆகவில்லை.

ஆனால் அதற்குள்ளேயும் இந்த கதையை வைத்து நாடகத்தை தாக்கு பிடிக்க முடியவில்லை என்பதால் ராடன் மீடியா இதை முடிக்க உத்தரவு கொடுத்து விட்டது. இதனை தொடர்ந்து தேய்ந்து போன டேப் ரெக்கார்டு போல இன்னும் சில நாடகங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் கூடிய விரைவில் முடியப்போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்