அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வெங்கட் பிரபு..தயாரிப்பாளரும் ரெடி

ஒரு படம் ஹிட்டானால் போதும் உடனே அந்த இயக்குனரை தொடர்பு கொண்டு நான் நீ என போட்டி போட்டு பட வாய்ப்புகள் வழங்குவார்கள். அதுவரை அவரை யாரும் கண்டுகொள்வது கூட கிடையாது. அந்த வகையில் இவ்வளவு நாள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கோலிவுட்டில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

காரணம் அவரது இயக்கத்தில் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியான மாநாடு படம் தான். யாருமே எதிர்பாராத வகையில் மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெங்கட் பிரபுவிற்கு மட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்த சிம்புவிற்கும் மாநாடு படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் இணைந்தது.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட்பிரபுவின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியும் இணைந்து தயாரிக்க உள்ளதாம்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்