samantha-12

சைடு போஸில் சந்தனக்கட்டை போலிருக்கும் சமந்தா.. 33 வயதில் தாறுமாறாக ட்ரெண்டாகும் புகைப்படம்

வினை தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சமந்தா. அதன்பிறகு கத்தி மற்றும் மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் சமந்தா தெலுங்கில் பிரபல நடிகரான நாகசைதன்யா திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சமந்தாவின் சக நடிகர்கள் இனிமேல் சமந்தா திரைப்படங்களில் நடிப்பது அரிது என கூறி வந்தனர். ஆனால் அவர்கள் வாயை மூடுவது போல் திருமணத்திற்கு பிறகும் பல ஹிட் படங்களை கொடுத்து அடுக்கடுக்கான வெப் தொடர்களில் நடிப்பது மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறார்.

இவரது பெயரிலேயே சாம் ஜாம் எனும் நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. கல்யாணத்திற்கு பிறகு சமந்தா கவர்ச்சியில் இறங்க மாட்டார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் சமந்தா கல்யாணத்திற்கு பிறகுதான் தொடர்ந்து படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

samantha
samantha

தற்போது கூட சமந்தா ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சமந்தாவை கல்யாணத்திற்கு பிறகும் இவ்வள அழகாக உள்ளார் என சமூக வலைதளங்களில் ஆச்சரியப்பட்டு செம க்யூட் மற்றும் வாவ், அழகோ அழகு என பதிவு செய்து வருகின்றனர்.

samantha
samantha

இந்த புகைப்படத்தை பார்த்த சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் போற போக்கை பார்த்த இளம் நடிகைகள் கூட டப் கொடுப்பார் போல எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

நூல் இழையில் உயிர் தப்பிய சூர்யா.. பிரபல இயக்குனர் அளித்த பேட்டி! வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமானாலும் தனது கடின உழைப்பால் மட்டுமே முன்னேறி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. இவருக்கென்று தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

மேலும் சில ஆண்டுகளாக தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத சூர்யா, சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மூலம் அனைவருக்கும் பெரும் தீனி போட்டார். அந்த அளவிற்கு அனைவரும் மெச்சும்படி சூரரைப் போற்று திரைப்படம் அமைந்திருந்தது. தற்போது சூர்யா வாடிவாசல் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் ஷூட்டிங்கின்போது நூலிழையில் உயிர் தப்பியதாக பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சூர்யா ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

அதாவது கோலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் சூர்யா ‘காக்க காக்க’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இவ்வாறிருக்க கௌதம் ஒரு பேட்டியில், சூர்யா ‘காக்க காக்க’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண் சிவந்து இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் உணவு அருந்தாமல் இருந்ததாகவும், இதன் காரணமாக காசிமேடு புரோக்கன் பிரிட்ஜ் மீது ஷூட்டிங் நடத்தப்பட்டபோது சூர்யா மயங்கி விழுந்ததாகவும், நூலிழையில் சூர்யா உயிர் தப்பியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தத் தகவல் இணையத்தில் பரவி வருவதோடு, கேட்போர் அனைவரையும் பதைபதைக்கச் செய்கிறது.

suriya-gvm
suriya-gvm

கௌதம் மேனன் பேட்டி அளித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.