Connect with us
Cinemapettai

Cinemapettai

mani ratnam aishwarya rai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மணிரத்னத்தை அலையவிட்ட ஐஸ்வர்யா ராய் பச்சன்.. மூட்டை முடிச்சை கட்டிய பரிதாபம்

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் காவியத்தை மிகவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னம் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படம் தற்போது இறுதி கட்ட பணிகளை எட்டியுள்ளது.

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி பணிகள் நடந்து வருவதால் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் அடுத்த கட்ட வேலையைப் பார்க்க சென்றுவிட்டனர்.

இந்நிலையில் படத்தில் சில விடுபட்ட காட்சிகளை எடுக்க வேண்டும் என்று மணிரத்னம் விரும்பியுள்ளார். அதாவது ஜெயம் ரவி மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் இடையே சில காட்சிகள் விடுபட்டுப் போய் உள்ளது. அதை மீண்டும் எடுக்க நினைத்த மணிரத்னம் ஐஸ்வர்யாராயை அணுகியுள்ளார்.

ஆனால் அவரோ படப்பிடிப்பு முடிந்து திரும்பவும் மும்பைக்கே சென்றுவிட்டார். இதனால் அவர் என்னால் சென்னைக்கு மீண்டும் வர முடியாது நீங்கள் வேண்டுமானால் மும்பைக்கு வந்து அந்த காட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சாதாரணமாக கூறிவிட்டாராம்.

இதனால் என்ன செய்வது என்று யோசித்த மணிரத்னம் வேறு வழியில்லாமல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு செல்ல தீர்மானித்துள்ளார். அதில் தற்போது மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஜெயம் ரவி இப்படத்திற்காக தன்னுடைய முடியை நீளமாக வளர்த்து இருந்தார்.

தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்ட படியால் அவர் அந்த முடியை வெட்டி அடுத்த படத்திற்காக தயாராகி விட்டார். படத்திற்கு இப்படி ஒரு சிக்கலா என்று நினைத்த மணிரத்னம் ஜெயம் ரவிக்கு விக் வைத்து அந்த காட்சிகளை படமாக்கி விடலாம் என்று முடிவு செய்துள்ளார். இதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவர் மும்பையில் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளார்.

Continue Reading
To Top