குணசேகரனின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய ஆதிரை.. பாசத்தையும் முரட்டுத்தனத்தையும் ஓவராக கொட்டும் கதிர்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், நேற்றைய எபிசோடு பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துவிட்டது. அண்ணன் தங்கை பாசம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று கதிர், ஆதிரையிடம் பேசியதை பார்க்கும் பொழுது உணர முடிகிறது. இத்தனை நாளா முரட்டுத்தனமாக கொடூரமாக வன்மத்தை மட்டும் காட்டி வந்த கதிர் மொத்தமாக தற்போது திருந்தி விட்டார்.

திருந்தியது மட்டுமில்லாமல் செய்த தவறுக்கு ஆதிரை மற்றும் சக்தியிடம் மன்னிப்பு கேட்டு சென்டிமென்ட் ஆக பாசத்தை பொழிய ஆரம்பித்து விட்டார். அத்துடன் இனிமேல் நாம் நான்கு பேரும் ஒற்றுமையுடன் பக்க பலமாக இருக்க வேண்டும் என்று ஞானமும் பாசத்தை காட்டிவிட்டார். தற்போது இவர்கள் அனைவரும் சக்தியை கூட்டிவிட்டு வீட்டிற்கு திரும்புகிறார்கள்.

ஆனால் வீட்டிற்கு போனதும் தாய் கிழவி ரொம்பவே துள்ளலாக ஆதிரை நீ ஏன் இங்கே வந்தாய், உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு ஆதிரை பக்குவமாக என் அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவங்களுக்கு சப்போர்ட்டாக நான் வந்து நிற்பேன். மற்றபடி நான் ஒன்னும் உரிமை கொண்டாட வரவில்லை என்று சொல்லி கதிர் மற்றும் ஞானத்துக்கு சப்போர்ட்டாக பேசிவிட்டார்.

Also read: நடுங்க வைக்கும் கொம்பையா பாண்டியனின் 5 படங்கள்.. “இளந்தாரிபய” என குரூத்தைக் கக்கும் குணசேகரன்

அத்துடன் குணசேகரனின் உண்மையான முகத்திரையை கிழிக்கும் விதமாக ஒவ்வொரு விஷயத்தையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார். இதுவரை ஞானம் மற்றும் கதிர் எந்த அளவிற்கு இந்த வீட்டிற்க்காகவும் குடும்பத்திற்காகவும் உழைத்திருக்கிறீர்கள் என்பதையும் எடுத்துரைக்கும் விதமாக பாயிண்ட் பாயிண்டாக பேசிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இனிமேல் இவர்களுடைய உறவை பிரிக்க முடியாத என்பதற்கு ஏற்ப ஸ்ட்ராங்காக ஒற்றுமையாகி விட்டார்கள். அடுத்ததாக தர்ஷினியை கண்டுபிடிக்க போனா மருமகள்களும் கூடிய விரைவில் தர்ஷினியை கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டி வந்து விடுவார்கள். அதன் பிறகு கணவனின் துணையுடன் ஒவ்வொருவரும் சாதித்துக் காட்ட போகிறார்கள்.

மேலும் கதிர், ஜனனிடம் மனதார மன்னிப்பு கேட்கும் தருணத்திற்கு தான் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இனி நகரப் போகும் கதை மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறது. அத்துடன் நந்தினிடம் இனி கதிர் ஓவராக பாசத்தை கொட்டி ரொமான்ஸ் பண்ண போகிறார்.

Also read: ஜீவானந்தத்திற்கு க்ளு கொடுத்த தர்ஷினி.. குணசேகரனை செல்லா காசாக ஆக்கப்போகும் மல்லுவேட்டி மைனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்