பேராசையால் பலான வேலை பார்த்த கணவர்.. மானம், மரியாதை போய் வாய்ப்பும் இல்லாமல் தவிக்கும் நடிகை

தன்னுடைய துரு துரு நடிப்பாலும் நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்து பேமஸ் ஆனவர் தான் இந்த நடிகை. பல கஷ்டங்களையும் தடைகளையும் தாண்டி தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்த இவர் வழக்கமான நடிகைகளை போல் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் கணவர் செய்த பலான வேலை ஒன்று நடிகையின் மொத்த மானத்தையும் காற்றில் பறக்க விட்டது. மனைவி பெரிய நடிகை என்பதால் அந்த பப்ளிசிட்டியை கணவர் தப்பாக பயன்படுத்தியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

நடிகையின் கணவர் படம் எடுக்கிறேன் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து பலான வேலை பார்த்து காசு பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருடைய இந்த கசமுசா வேலை லீக் ஆகி ஜெயிலுக்கு சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை கணவரை விவாகரத்து செய்யும் யோசனையில் இருந்தார்.

Also read: மகளை வைத்து காசு பார்க்க திட்டம் போட்ட அம்மா.. காதலனோடு ஓட்டம் பிடித்து அல்வா கொடுத்த நடிகை

ஆனால் மனசு கேட்காமல் அங்கே இங்கே கடன் வாங்கி கணவரை வெளியில் கொண்டு வந்து விட்டார். ஆனால் நடிகைக்கு இப்போது சுத்தமாக பட வாய்ப்புகள் வருவதில்லையாம். வாங்கிய கடனும் கழுத்தை பிடிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் அவர் திண்டாடிக் கொண்டிருக்கிறாராம்.

அதைப் பார்த்த கணவர் மீண்டும் அந்த தொழிலையே செய்யலாம் அதுவும் ரகசியமாக என்று மனைவிக்கு ஐடியா கொடுத்திருக்கிறார். இதை கேட்டு பத்திரகாளி ஆன நடிகை கணவரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார். மேலும் கடனை அடைக்க சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்கவும் அவர் இறங்கி வந்துள்ளாராம்.

Also read: கல்யாண வீட்டில் நடந்த சரக்கு பார்ட்டி.. பாய் பிரண்டுடன் கும்மாளம் போட்ட நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்