வாய்ப்பில்லாமல் திண்டாடும் விஜய் பட இயக்குனர்.. தளபதி படத்தால் ஏற்பட்ட பெரும் சோதனை

Thalapathy Vijay: பூனை கண்ணை மூடினால் உலகமே இருட்டாயிடும் என நினைத்துக் கொள்ளுமா. அப்படித்தான் சினிமாவில் பாதி பேரின் நிலைமை இருக்கிறது. அவர்கள் எந்த பார்வையில் ஒரு படத்தை பார்க்கிறார்களோ, அதே போல தான் ரசிகர்களும் இருப்பார்கள் என நினைத்துக்கொள்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து படம் பண்ணிவிட்டால் நாமும் பெரிய இடத்திற்கு போய்விடலாம் என்று நினைப்பு வேற. கதை எப்படி இருந்தாலும் பரவாயில்லை, அதுல ஒரு டாப் ஹீரோ இருந்தா படம் ஹிட்டு தான் எனவும் இவர்களுக்கு எல்லாம் நினைப்பு.

இந்த லிஸ்டில் நம்ம சிறுத்தை சிவா கூட சேர்த்துக்கலாம் ரொம்ப சீக்கிரமே அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைச்சிடுச்சு அதனால என்ன பண்ணாலும் படம் ஹிட்டுதான் நினைச்சுட்டாரு ரஜினியே நடிச்சாலும் கதை இருந்தாதான் படத்துக்கு மதிப்பும்னு ரசிகர்கள் காட்டிட்டாங்க.

அப்படித்தான் விஜய் படம் இயக்குனர் ஒருவரும் தேவை இல்லாமல் சிக்கியிருக்கிறார். விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படம் தான் வாரிசு. படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டது.

அதோடு சேர்த்து பல சர்ச்சைகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் பொங்கல் ரேசில் வழக்கமான விஜய் படம் போல் வசூலை தன் வசம் கட்டிக் காத்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் சேஃப் ஆகிவிட்டார்.

தளபதி படத்தால் ஏற்பட்ட பெரும் சோதனை

விஜய் கேட்கவே வேண்டாம் அதற்கு அடுத்து தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில், வழக்கமான தன்னுடைய சம்பளத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இதில் ஐயோ பரிதாபமானது இயக்குனர் வம்சி தான். வாரிசு படத்தைப் பொறுத்த வரைக்கும் கதை ரீதியாக பெரிய நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்தது.

இதனால் வம்சிக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில் பெரிய சிக்கல் இருக்கிறது. இவர் சீரியல் போல் படத்தை இயக்கியிருக்கிறார் என அப்போவே விமர்சனம் இருந்தது. இப்போ அதையே சொல்லி வம்சியை ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக எந்த ஒரு பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். என்னதான் பெரிய ஹீரோவின் படம் கிடைத்தாலும், நம்ம வேலையை நம்ம கரெக்டா செஞ்சா தான் ஃபீல்டுல இருக்க முடியும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்