செல்வராகவனை கேவலமாய் பேசிய பழைய நடிகை.. தம்பியை வைத்து பதிலடி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான காதல் கதைகள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் செல்வராகவன். இவருடைய இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும். பெரும்பாலான படங்களை செல்வராகவன் தனது தம்பி தனுஷ் வைத்து இயக்கி வருகிறார்.

இயக்குனராக இருந்த செல்வராகவன் சாணிகாகிதம் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகயுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாணிக்காகிதம் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்திலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மயக்கம் என்ன படத்திற்கு பிறகு தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் மீண்டும் நானே வருவேன் படம் உருவாக உள்ளது இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலத்தில் செல்வராகவனின் கண்ணை பார்த்து பலரும் கிண்டல் செய்ததாக சமீபத்திய பேட்டியில் செல்வராகவன் தெரிவித்திருந்தார்.

60, 70களில் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் எம்ஜிஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை வைஜெயந்தி மாலா. இவர் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த நல்ல இயக்குனரை தேடிக் கொண்டிருந்தார். அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் செல்வராகவனுக்கு சிபாரிசு செய்துள்ளார்.

இதனால் படத்தின் கதை சொல்வதற்காக செல்வராகவன் வைஜெயந்திமாலா வீட்டிற்கு சென்றுள்ளார். செல்வராகவனை பார்த்த வைஜெயந்திமாலா முகம் சுளித்து உள்ளார். நீ இயக்குனர் என்றால் இந்த படம் வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் செல்வராகவன் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

அதன் பிறகு செல்வராகவன் தனது தம்பி தனுஷ் வைத்து துள்ளுவதோ இளமை படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு, செல்வராகவனிடம் வைஜெயந்திமாலா தனது மகனை வைத்து ஒரு படம் இயக்குமாறு கூறியுள்ளார். ஆனால் செல்வராகவன் அதனை கண்டுகொள்ளாமல் இல்லையாம். இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்