தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருக்கும் திரைப்படம் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமைதான். இப்படத்தை 2 வருடமாக வெளிவராமல் இருக்கிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தனர். ஆனால் சமீபத்தில் போனிகபூர் படத்தை பொங்கலன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் படத்தை தற்போது வெளியிட வில்லை என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்தனர். இதனால் அஜீத் ரசிகர்கள் மீண்டும் சோகத்தில் உள்ளனர். ஆனால் படத்தை கூடிய விரைவில் வெளியிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்திருப்பதால் பொங்கலுக்கு வெளியிடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு அனுமதித்து இருந்தாலும் தற்போது எந்த படமும் பொங்கலுக்கு வெளியாகவில்லை.
மேலும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்தான் வலிமை படத்தை வெளியிட படக்குழுவினர் தயக்கம் காட்டி உள்ளனர். விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடவா மற்றும் கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய 3 படங்களும் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் 100 சதவீதம் இருக்கைக்கு இதுவரையில் அனுமதி இல்லை.
ஆனால் தற்பொழுது தமிழக அரசு 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி தருவதை பற்றி ஆலோசித்து வருகின்றனர். சில நாட்களில் கொரோனா தொற்று குறைந்தால் அனுமதி அளிக்கலாம் எனவும் பேசி வருகின்றனர். பொங்கல் வரை மட்டும் கொஞ்சம் விட்டு புடிச்சிட்டு பிறகு கடுமையான ஊரடங்கு அமுலுக்கு வரபோவதாகவும் கூறுகின்றனர்.
எது எப்படியோ? வலிமை படம் பொங்கலுக்கு அல்லது ஜனவரி 26 ஆம் தேதி வெளி வர அதிக வாய்ப்பு உள்ளதாம். ஆனால் கொரோனா பரவல் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
எப்பொழுது வைரஸ் கட்டுக்குள் வருகிறதோ அப்போதுதான் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியாக உள்ளனர் வலிமை படக்குழு.