தெரியாமல் கமலை குரு என்று சொல்லிட்டமோ? உலக நாயகன் மீது செம கடுப்பில் லோகேஷ் கனகராஜ்

கமல்ஹாசனுடன் எவ்வளவு பெரிய இயக்குனர் பணியாற்றினாலும் அவர்களது கதையில் தலையிடாமல் அவரால் ஒரு நாளும் இருக்க முடியாது. அப்படி லோகேஷ் கனகராஜ் கதையிலும் ஏகப்பட்ட பிரச்சனையை செய்துள்ளாராம் கமலஹாசன்.

கமல்ஹாசனின் படங்களை பார்த்து தான் சினிமாவை கற்றுக்கொண்டேன் என எப்போது லோகேஷ் கனகராஜ் சொன்னாரோ அப்போதே அவருக்கு பிரச்சனை ஏற்பட்டு விட்டது போல. கமலஹாசன் திறமையான கலைஞர் தான், அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் மற்றவர்களின் திறமையில் உள்ளே புகுந்து மூக்கை நுழைப்பது தான் பலருக்கும் கோபத்தை வரவழைக்கிறது.

அவரவர்களுக்கு தெரிந்த சினிமாவை அவரவர்கள் எடுக்க வேண்டும் என்பதுதானே வரையறை. ஆனால் கமலஹாசன் நடிக்கும் படங்களில் மட்டும் தான் என்ன சொல்கிறோமோ அதை தான் இயக்குனர் செய்ய வேண்டும் என நினைப்பவர்.

பெரும்பாலான படங்களுக்கு கமல்ஹாசனே கதை எழுதி விடுவார். அந்த காட்சிகளை படமாக்குவதற்காக பெயருக்கு ஒரு இயக்குனர் இருந்தால் போதும் என நினைப்பவர். அப்படிப்பட்டவரிடம் இளம் இயக்குனர் லோகேஷ் மாட்டிக்கொண்டார்.

கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை எடுக்க இருந்தார். எலக்சனுக்கு முன்பே விக்ரம் படம் வெளியாக இருந்த நிலையில் கமல் தொடர்ந்து தேர்தலில் பிசியாகி விட்டதால் இப்போதுதான் விக்ரம் படம் மெல்ல மெல்ல ஆரம்பிக்கப்பட உள்ளது. ஆரம்பிப்பதற்கு முன்னால் லோகேஷின் கதையை வாங்கி பார்த்துள்ளார் கமலஹாசன்.

ஏற்கனவே நான்கு முறை லோகேஷ் கதையில் மாற்றம் சொன்ன கமல் இந்த முறையும் ஒரு குறிப்பிட்ட காட்சியை மாற்றச் சொல்லி இருக்கிறார். இதனால் கடுப்பான லோகேஷ் ஊருக்கு பொட்டியை கட்டி கிளம்பி விட்டார் என்பதுதான் இன்றைய கோலிவுட் பரபரப்பு செய்தி. இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.

vikram-cinemapettai
vikram-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்