பிரபல நடிகருக்கு வில்லனாக 15 கோடி சம்பளம் கேட்ட விஜய் சேதுபதி.. ஆத்தாடி!

சினிமாவில் பலரும் ஒரு இலக்கு வைத்து தான் நடிக்க வருவார்கள். ஆனால் விஜய் சேதுபதி மட்டும் எந்த ஒரு இலக்கும் இல்லாமல் நினைத்ததை செய்து கொண்டிருக்கிறார். அதுவும் அவருக்கு வெற்றிப் படிகளாகவே அமைந்து வருகின்றன.

சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். ஹீரோவாக வித்தியாச வித்தியாசமான படங்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதியை சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து கேரியரை கெடுத்துக் கொள்ளாமல் வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, எல்லாத்துக்குமே நான் ரெடிதான் எனக் கல்லா கட்டி வருகிறார்.

அதுவும் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த பிறகு விஜய் சேதுபதியின் சினிமா மார்க்கெட் ஏகபோகத்திற்கு உயர்ந்துள்ளது. தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்க வந்த படக்குழுவினரிடம் 15 கோடி சம்பளம் பேசி உள்ளார் விஜய் சேதுபதி. படக்குழுவினரும் மறுவார்த்தை பேசாமல் 15 கோடியை கொடுக்க ஒப்புக்கொண்டது தான் ஆச்சரியமாக இருக்கிறதாம்.

சமீபத்தில் ஒரு நடிகர் பல கேலி கிண்டல்களுக்கு உள்ளானார் என்றால் அது நம்ம பாலகிருஷ்ணா தான். சமீபத்தில்கூட ஏ ஆர் ரகுமான் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். அப்படிப்பட்டவர் படத்தில் விஜய் சேதுபதி எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார்? என்ற பேச்சு கோலிவுட்டில் புகைய ஆரம்பித்துள்ளது.

balakrishna-actor-cinemapettai
balakrishna-actor-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்