ஒத்த கேரக்டரால் மொத்தமும் சரிந்து போன எதிர்நீச்சல்.. சூடு பிடிக்க கடைசி அஸ்திவாரத்தை எடுத்த அப்பத்தா

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் எப்ப பாத்தாலும் பிரச்சனை சண்டை சச்சரவு என்று ஓயாமல் அடிதடியாகவே இருந்து வருகிறது. அதிலும் கதிரின் ஆட்டத்தை விட டபுள் மடங்கு வார்த்தையாலேயே அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறார் ஜான்சி ராணி. இதுல போதாத குறைக்கு கரிகாலன் உடைய பேச்சு வேற கடுப்பாக இருக்கிறது. அத்துடன் குணசேகரனின் அம்மாவும் மாமியார் தோரணையில் ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார்.

இவர்களுக்கு மத்தியில் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் சுயமாக சம்பாதித்து முன்னேற வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அதில் முதற்கட்டமாக ஜனனி பிசினஸில் காலடி எடுத்து வைக்கும் தருவாயில் வீட்டில் இருக்கும் ஜான்சி ராணி மற்றும் மாமியார் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார். இதை எப்படியாவது சரி செய்து முன்னேறலாம் என்று நினைக்கும் பொழுது புதிதாக வந்த வில்லன் மூலம் மறுபடியும் ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது.

இப்படித்தான் ரேணுகா மற்றும் நந்தினியுடைய வேலையும் கெடுத்து விட்டார்கள். அடுத்து ஈஸ்வரியும் காலேஜுக்குலாம் போகக்கூடாது என்று மாமியார் கண்டிஷன் போட்டு இருக்கிறார். இப்படி தொடர்ந்து கொடுத்த பிரச்சினையால் அந்த வீட்டில் உள்ள பெண்கள் மறுபடியும் அடுப்பாங்கறையிலேயே புலம்பிக் கொண்டு முடங்கி விட்டார்கள்.

இதிலிருந்து எப்படியாவது மீண்டு வாருங்கள் என்று அப்பத்தா அவ்வப்போது அட்வைஸ் கொடுத்து வருகிறார். அத்துடன் கடந்த ஒரு வருஷமாக அப்பத்தாவின் 40% சொத்துக்கு அடி போட்டுக் கொண்டிருந்த குணசேகரனின் தலையில் கல்லைத் தூக்கிப் போடும் வகையில் அப்பத்தா இதற்கு ஒரு முடிவு கட்டிவிட்டார்.

அதாவது ஒட்டுமொத்த குடும்பமும் அந்த ஊரில் நடக்கும் திருவிழாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த திருவிழாவின் போது அப்பத்தா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணி அந்த 40% சொத்தை நல்ல காரியங்களுக்கு கொடுக்கப் போகிறார். இதை தலைமை தாங்கும் பொறுப்பில் ஜீவானந்தம் வர இருக்கிறார். அந்த நேரத்தில் இவருடைய கதையை முடிக்கும் விஷயத்தில் கதிர் மற்றும் வளவன் இறங்குகிறார்கள்.

இப்படியும் அண்ணன் ஆசைப்பட்ட மாதிரி அவர் திருவிழாக்கு வரும் போது அந்த ஜீவானந்தத்தின் உயிர் போயிருக்க வேண்டும் என்று கதிர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். அதே நேரத்தில் ஜீவானந்தத்திற்கு தன்னுடைய மனைவியின் இறப்பிற்கு காரணம் குணசேகரன் மற்றும் கதிர் தான் என்ற உண்மையை தெரிந்து விட்டது. இதனால் அவர்களுடைய கதையை முடித்தாக வேண்டும் என்று இன்னொரு பக்கம் ஜீவானந்தம் காத்துக் கொண்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் திருவிழா அன்றைக்கு ரத்த கலவரம் நடக்கப் போகிறது உறுதியாக தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்