செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

சந்தி சிரிக்கும் விஜய்-த்ரிஷா விவகாரம்.. மொத்த உண்மையையும் புட்டு புட்டு வைத்த சுசித்ரா

Suchithra: தன்னுடைய பேட்டிகளின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கலங்கடித்தவர் பாடகி சுசித்ரா. அதிலும் நடிகர் தனுஷின் மொத்த சொந்த வாழ்க்கையையும் பொதுவெளிக்கு அம்பலப்படுத்தினார். நல்ல வேலை இவர் விஜயை பற்றி எதுவும் பேசவில்லை என்று அவருடைய ரசிகர்கள் பெருமூச்சு விட்டார்கள்.

ஆனால் தற்போது தானாகவே வந்து கண்டன்ட்டை கொடுத்துவிட்டார் விஜய். விஜய் மற்றும் திரிஷா விவகாரம் ஊரறிந்த விஷயம். இதை பற்றி பல பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சுசித்ராவிடம் சில ரசிகர்கள் இந்த சமாச்சாரத்தை பற்றி பேச கேட்டிருக்கிறார்கள். அவரும் தனக்கு தெரிந்த எல்லாத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார். சுசித்ராவின் வீடியோவை பார்க்கும் பொழுது விஜய் மற்றும் சங்கீதா தற்போது ஒன்றாக இல்லை என்பது தெரிகிறது.

சந்தி சிரிக்கும் விஜய்-த்ரிஷா விவகாரம்

மேலும் த்ரிஷாவை எனக்கு சுத்தமாக பிடிக்காது, விஜயை எனக்கு ரொம்ப பிடிக்கும் எந்த விதத்திலும் பாரபட்சம் பார்க்காமல் இதற்கு நான் பதில் சொல்கிறேன் என வீடியோ ஆரம்பிப்பதற்கு முன்பே சொல்லிவிட்டார்.

அதாவது விஜய் தற்போது தன்னுடைய அப்பா அம்மா கூட இல்லை, அதே மாதிரி மனைவி மற்றும் பிள்ளைகளும் அவருடன் இல்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் அரசியலை தேர்ந்தெடுத்து விட்டார் விஜய். ஆனால் இந்த தனிமையை எப்படியாவது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திரிஷா திட்டமிடுவதாக சுசித்ரா குற்றம் சாட்டி இருக்கிறார்.

இத்தனை வருட சினிமா வாழ்க்கையை விட்டுவிட்டு அரசியல் தான் இனி என விஜய் முடிவெடுத்து இருக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் கண்டிப்பாக இந்த மாதிரி பெண் விஷயத்தில் பெயர் கெட்டுப் போக அவர் விரும்ப மாட்டார். எனவே இது முழுக்க முழுக்க விஜயின் விருப்பம் இல்லாமல் த்ரிஷா பண்ணும் வேலை என விளக்கம் கொடுத்திருக்கிறார் சுசித்ரா.

தளபதி வாழ்க்கையில் விளையாடும் திரிஷா

- Advertisement -spot_img

Trending News