உலகின் பழமையான சூரிய கடிகாரம் எங்க இருக்கு தெரியுமா.? 750 ஆண்டுகளுக்கு முன்பே ஆச்சரியப்படுத்திய சோழனின் கண்டுபிடிப்பு

Solar Clock: இப்போது எல்லாம் ஸ்மார்ட் வாட்ச் வரைக்கும் வந்துவிட்டது. ஆனால் அந்த காலத்தில் கடிகாரம் எல்லாம் கிடையாது. பிறகு எப்படி அப்போதைய மக்கள் நேரத்தை கணக்கிட்டு இருப்பார்கள்.

அதெல்லாம் சூரியனை வைத்து தான். இப்போது கூட கிராமத்தில் தாத்தா பாட்டி சூரியனை பார்த்து உச்சிப் பொழுது வந்துவிட்டது. பொழுது சாயப்போகுது என சொல்வார்கள். அதுதான் அவர்களுடைய கடிகாரம்.

சூரியனை வைத்து அவர்கள் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டதும் ஆச்சரியம் தான். இதைவிட மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் 750 ஆண்டுகளுக்கு முன்பு சோழன் கண்டுபிடித்த சூரிய கடிகாரம்.

விக்ரமச்சோழன் கண்டுபிடித்த இந்த சூரிய கடிகாரம் இன்றும் கூட கர்வத்தோடு நின்று துல்லியமாக நேரத்தை காட்டுகிறது. அது மட்டும் இன்றி உலகிலேயே மிகவும் பழமையான சூரிய கடிகாரமும் இதுதான்.

சோழனின் விஞ்ஞான அறிவு

கோவில்களின் நகரமான கும்பகோணம் அருகே இருக்கும் திருவிசநல்லூரில் தான் இந்த பழமையான சூரிய கடிகாரம் உள்ளது. அங்கே இருக்கும் சிவன் கோவிலில் விக்ரமச்சோழனின் திருச்சுற்று மாளிகை உள்ளது.

30 அடி உயரம் கொண்ட இந்த சுவரில் தான் சோழர்களின் சூரிய கடிகாரம் உள்ளது. இது எப்படி இருக்கும் என்றால் சுவற்றின் நடுவில் பெரிய இரும்பு கம்பி ஒன்று நடப்பட்டிருக்கும். அதை சுற்றி அரைவட்ட வடிவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

சூரியனின் ஒளி அந்த கம்பியின் மீது படும்போது நிழல் எந்த எண்ணில் இருக்கிறதோ அதுதான் அப்போதைய நேரம். அதில் இருந்த பழங்கால எழுத்துக்கள் இப்போதைய மக்களுக்கு புரியும் படி இன்றைய தமிழில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல நூறு ஆண்டுகள் கழிந்தாலும் இந்த சூரிய கடிகாரம் கும்பகோணத்தின் சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோல் அது துல்லியமாக மணி காட்டுவது சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகிறது.

அறிவியல் சார்ந்த செய்திகள்

Next Story

- Advertisement -