இனி மங்காத்தா ஆட்டம் தான் – கேம் ஸ்டார்ட்.. ஆக்சன் கிங்கின் அதிரடி முடிவு

மங்காத்தா படத்தில் வருவது போல் உள்ளே, வெளியே என வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வருகிறார் ஆக்சன் கிங் அர்ஜுன். தனது படங்களில் ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் ஆக்சன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஒரே ஹீரோ அர்ஜுன்.

படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஆக்சன் கிங்காகவே வாழ்ந்து வருகிறார். ஆமாங்க, தனது 16 வயதிலே கராத்தே பயின்று அதில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். இதனால்தானோ என்னவோ ரசிகர்கள் இவருக்கு ஆக்சன் கிங் பட்டத்தை வழங்கியுள்ளனர். ஒரு காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணணாகவும் திகழ்ந்திருக்கிறார்.

இவரது கட்டுமஸ்தான உடல், மற்றும் சிக்ஸ் பேக்ஸ்க்கு மயங்காத பெண் ரசிகைகள் இல்லை. 25 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய அர்ஜுன் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

நடிப்பு மட்டுமின்றி வித்தியாசமான செயல்களை செய்து வருவதில் நடிகர் அர்ஜுன் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது புதிதாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.

survivor
survivor

இதன்மூலம் சூர்யா, சரத்குமார், கமல் இவர்களின் வரிசையில் நடிகர் அர்ஜுனும் இணைய உள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சி தயாரிக்கவுள்ள சர்வைவர் என்கிற சாகச நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளதாகவும், இதன் ப்ரோமோ படப்பிடிப்பிற்காக தென்ஆப்பிரிக்கா செல்லவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவ்ளோ நாள் வெள்ளித்திரையில ஆக்சன் காட்டுனவரு இப்போ சின்னத்திரையில ஆக்சன் காட்ட வர்ரார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்