பாடிய பின் நீ என்ன ஜாதி-ன்னு கேட்பாங்க.? சூப்பர் சிங்கர் அருணா கொடுத்த பதிலடி

Vijay Tv Super Singer winner Aruna: விஜய் டிவியை யாருமே நெருங்க முடியாத அளவிற்கு நிகழ்ச்சிகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, மக்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதுவரை ஜூனியர், சீனியர் என்று பல கலைஞர்களை நமக்கு கொடுத்திருக்கிறது. தற்போது சீனியர்கான சூப்பர் சிங்கர் 9 சீசன் இறுதிக்கட்டத்தை அடைந்து வெற்றியாளர்களை அறிவித்துவிட்டார்.

அதாவது நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் டாப் 5 போட்டியாளர்களான அருணா, அபிஜித், பூஜா, பிரசன்னா மற்றும் பிரியா ஜெர்ஸன் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்கள் ஐந்து பேருமே அவர்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி பாடினார்கள்.

Also read: விவாகரத்தை ட்ரெண்ட் ஆக்கிய 4 விஜய் டிவி பிரபலங்கள்.. ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு!

ஆனால் ஒருவரை மட்டும் தான் வின்னராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் இந்த ஐந்து பேர்களில் மயிலாடுதுறையை சேர்ந்த அருணா தான் சூப்பர் சிங்கரின் டைட்டில் வின்னராக வெற்றி வாகை சூடினார். மேலும் ரசிகர்களின் வாக்குகள், நடுவர்களின் மதிப்பெண்கள் வைத்து அதிக ஓட்டுக்களை வாங்கியது இவர்தான். அத்துடன் இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

அதன் பிறகு மேடையில் அருணா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இவர் பேசிய வீடியோவில் “நான் இந்த மேடைக்கு வருவதற்கு முன் கோவில்களில் அடிக்கடி பாடியிருக்கிறேன். அப்பொழுது என்னிடம் வந்து முதலில் அவர்கள் கேட்கும் கேள்வி நீ என்ன ஜாதியை சேர்ந்தவர் என்றுதான்.”

Also read: சம்யுக்தாவை குறித்து பகிரங்கமாக பேசி சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி ராஜலஷ்மி.. இப்படியா பேசி கேவலப்படுத்துவது!

என் ஜாதியை சொல்லிவிட்டால் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வராமல் போய்விடுமோ என்ற பயத்தில் நான் சொல்லாமல் தவித்திருக்கிறேன்.எங்கே போனாலும் முதலில் என்னிடம் கேட்கும் கேள்வி என்னுடைய ஜாதியை பற்றி தான். அதனால் நான் வெளியில் பாடுவதற்கு ரொம்பவும் பயந்து போய் வீட்டிற்குள்ளே முடங்கி இருக்கிறேன்.

ஆனால் இப்பொழுது அவர்களுக்கு எல்லாம் நான் கொடுக்கும் பதில் இதுதான் என்னுடைய வெற்றி என்று ஜெயித்த பரிசை காட்டியிருக்கிறார். அத்துடன் இனி என்னால் எந்த மூலைக்கும் சென்று பாட முடியும் என்று உணர்ச்சிபூர்வமாக பேசி இருக்கிறார். இதில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் இதுவரை நடந்த சூப்பர் சிங்கர் அனைத்து சீசன்களிலும் டைட்டில் வின்னர் ஆகிய முதல் பெண்மணி இவர் தான்.

Also read: சிவகார்த்திகேயன் போல் கடனில் தவிக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.. சொந்த ஊருக்கே செல்ல முடிவெடுத்த பரிதாபம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்