Vijay: புஷ்பா 2 ரெக்கார்டை உடைத்த தளபதி.. கோடிகளை கொடுத்து கோட் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய நெட்வொர்க்

Vijay: இனி அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது. அதில் புஷ்பா 2 ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதேபோல் தளபதியின் கோட் படமும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமை பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.

அதன்படி இப்படத்தை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தன. அதில் ஜீ நெட்வொர்க் ஒட்டுமொத்த மொழிகளின் சாட்டிலைட் உரிமைகளையும் 93 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.

புஷ்பா 2 ரெக்கார்டை உடைத்த தளபதி

இதற்கு முன்பு விஜய்யின் லியோ தென் இந்திய சாட்டிலைட் உரிமை 73 கோடிகளுக்கு விற்பனையானது. அதேபோல் புஷ்பா 2 சாட்டிலைட் உரிமை 80 கோடிகளுக்கு வியாபாரம் ஆகி உள்ளது.

அந்த வகையில் கோட் இந்த ரெக்கார்டுகளை உடைத்துள்ளது. மேலும் தளபதி 69 படத்தின் ஓடிடி உரிமையும் பெரும் லாபத்திற்கு இப்போதே விற்பனையாகி உள்ளது.

அதன்படி சூட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே இதன் உரிமையை நெட்பிலிக்ஸ் வாங்கியுள்ளது. தோராயமாக 120 கோடி இருக்கலாம் என்ற தகவலும் இப்போது கசிந்துள்ளது.

அரசியல் பயணத்தின் காரணமாக விஜய் இந்த படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்ல இருக்கிறார். அதனாலயே இதன் வியாபாரமும் எதிர்பார்க்காத அளவிற்கு எகிறி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்