டம்மியோட சேர்த்து வெளியேற போகும் விஷ பாட்டில்.. போட்டியாளர்களை கதி கலங்க வைக்க வரும் பிக்பாஸ் முரட்டு பீசு

Biggboss 7: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் பூகம்ப டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் தோற்கும் போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். அது மட்டுமல்லாமல் ஏற்கனவே வெளியேறிய நபர்கள் மீண்டும் வீட்டுக்குள் வருவார்கள் என பிக்பாஸ் அறிவித்தார்.

உடனே பயந்து போன ஹவுஸ் மேட்ஸ் விளையாட்டில் தீவிரம் காட்ட ஆரம்பித்தனர். ஆனாலும் கடுமையான போட்டிகளை அவர்களால் சமாளிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அந்த வகையில் இந்த வாரம் ஓட்டுகளின் அடிப்படையில் கடைசி இரண்டு இடங்களை பூர்ணிமா மற்றும் அட்ஷயா இருவரும் பிடித்துள்ளனர்.

இதில் ஒருவர்தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த வாரம் இரண்டு பேரையும் வெளியில் அனுப்ப பிக்பாஸ் முடிவு செய்து இருக்கிறார். அதற்கு பதிலாக ஏற்கனவே மக்களால் வெளியே அனுப்பப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வர இருக்கின்றனர்.

Also read: குடிகார அங்கிள் கமல், கோபத்தில் பொங்கிய பூர்ணிமா.. இந்த வாரம் சோலியை முடிக்க போகும் பிக்பாஸ்

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் முரட்டுத்தனத்தை காட்டி கடும் வெறுப்புகளை சம்பாதித்த விஜய் வர்மா மீண்டும் வர இருக்கிறார். அவருடன் சேர்த்து வினுஷாவும் களம் இறங்குகிறார். இவருடைய என்ட்ரி நிச்சயம் நிக்சனுக்கு பூகம்பத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே போன்று விஜய் வர்மா மட்டும் வந்து விடக்கூடாது என போட்டியாளர்கள் அனைவரும் பயந்தனர். ஆனால் அந்த பயம்தான் எங்களுக்கான டிஆர்பி என்று சொல்லும் வகையில் விஜய் டிவியில் மீண்டும் அவரை உள்ளே அனுப்ப திட்டம் போட்டு இருக்கிறது. இதனால் வீட்டில் எந்த நேரமும் அபாய சங்கு ஒலிக்கலாம்.

ஆக மொத்தம் டம்மி பீஸ் அட்ஷயாவோடு பூர்ணிமாவும் வெளியேறுவது ஆச்சரியம் தான். ஏனென்றால் மாயாவோடு அவர் கடைசி வரை பயணிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக் பாஸ் இன்னும் சில ட்விஸ்ட்களை கொடுக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

Also read: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்யும் அட்டூழியங்கள்.. ஆண்டவரே உங்க அரசியலை எங்க கிட்ட காட்டுறீங்களே!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்