Bhakkiyalakshmi: கோபிக்கு சங்கு ஊத போகும் மகன்கள்.. பாக்கியா எடுத்த முடிவால் நிலைகுலைந்து போய் நிற்கும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி அப்பாவாக போகிறார் என்ற உண்மை தற்போது குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் வாயை மூடிக்கொண்டு அப்படியே போய் விட்டார்கள். இதனால் கோபி, ராதிகாவிடம் புலம்பி தவிக்கிறார்.

ஒவ்வொருவரும் என்னை ரொம்பவே அசிங்கமாக பார்க்கிறார்கள். என்னுடைய அப்பா ச்சி என்று சொல்லி இனியா என்னப்பா இதெல்லாம் என்று என்னை கேட்பது ரொம்பவே கேவலமாக இருக்கிறது என்று கோபி ராதிகாவிடம் சொல்லி புலம்புகிறார். ஆனால் ராதிகா இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப ரியாக்ஷன் கொடுக்கிறார்.

ராதிகாவை பொருத்தவரை இந்த குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் இவர்கள் என்ன நினைத்தால் எனக்கு என்ன என்று தெனாவட்டாக இருக்கிறார். அத்துடன் நீங்கள் உண்மையை சொல்லியும் யாரும் பெருசா எதுவும் சொல்லவில்லை. அத்துடன் உங்கள் பிள்ளைகள் எதுவும் இதைப் பற்றி தப்பாக நினைக்க மாட்டார்கள் என்று கோபிக்கு ஆறுதல் கூறுகிறார்.

பிள்ளைகளுக்காக பாக்கியா எடுத்த முடிவு

இதனை அடுத்து பாக்கியா ரூமிற்கு வந்து செழியன் மற்றும் எழில் அம்மாவின் நிலைமை கண்டு ரொம்பவே வருத்தப்பட்டு போகிறார்கள். பிறகு இப்படியே விட்டால் சரி வராது என்று நினைத்து அப்பாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் என்று செழியன் மற்றும் எழில் முடிவெடுத்து விட்டார்கள். அந்த வகையில் கோபி வழக்கம் போல் காலையில் நடைபயிற்சி போகும்பொழுது அங்கே வந்த எழில், கோபியிடம் தயவு செய்து நீங்கள் வீட்டை விட்டு போய் விடுங்கள்.

உங்க பிரச்சனையை நினைத்து தேவையில்லாமல் நாங்கள் ஏன் யோசிக்க வேண்டும் என்று கோபியிடம் சொல்கிறார். அதற்கு கோபி நான் ஏன் போக வேண்டும். நீ சொல்லிலாம் என்னால போக முடியாது என்று சொல்கிறார். பிறகு வீட்டிற்கு வந்த எழில், செழியன் நடைபயிற்சி போகும்பொழுது நீயும் சீக்கிரம் போயிட்டு வீட்டுக்கு வந்து விடு.

நம் இருவரும் சேர்ந்து அப்பாவை வீட்டை விட்டு துரத்தி விடலாம் என்று பிளான் பண்ணி விட்டார்கள். அந்த வகையில் அனைவரும் இருக்கும் பொழுது கோபியிடம் பேசி வீட்டை விட்டு போங்க என்று எழில் மற்றும் செழியன் சொல்கிறார்கள். ஆனால் கோபி நான் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த நிலையில் பாக்யா இது என்னுடைய வீடு.

இப்போ நான் சொல்கிறேன் என் பிள்ளைகளுக்கு நீங்கள் இங்கே இருப்பது பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்லிவிடுகிறார். அதற்கு நீங்கள் யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என் அம்மா தான் என்னை இங்கே கூட்டிட்டு வந்தார். அவர் எனக்காக சப்போர்ட் பண்ணும் பொழுது நான் எதற்கு வெளியே போக வேண்டும் என்று தெனாவட்டாக கோபி சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி, கோபியை பார்த்து உன் பிள்ளைகள் ஏதாவது உன்னை பண்ணுவதற்குள் வீட்டை விட்டு போய்விடு என்று சொல்லி கோபி மூஞ்சியில் கரியை பூசி விட்டார். இதனைத் தொடர்ந்து பாக்யா வெளியே போக சொன்னதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ராதிகா அப்படியே நிலைகுலைந்து போய் நிற்கிறார்.

இப்பொழுது வெளியே போனாலும் வளைகாப்பு மற்றும் குழந்தை பிறந்தவுடன் மறுபடியும் பாக்யா வீட்டிற்குள் வந்து ஆராஜகம் பண்ணப் போகிறார்கள். இதற்கு ஒரு எண்டு கார்டே இல்லையா என்பதற்கு ஏற்ப வந்தான் போனான் ரிப்பீட்டு என்பதற்கு ஏற்ப கதை மட்டமாக நகர்ந்து வருகிறது.

Next Story

- Advertisement -