எவர்கிரீன் நடிகையின் கோபத்துக்கு ஆளான நடிகர்.. சொகுசு விடுதியில் அம்மாவுக்கும் சேர்த்து நடந்த கவனிப்பு

என்னதான் மாஸ் நடிகராக இருந்தாலும் சமீப காலமாக அவருடைய பெயர் பல சர்ச்சைகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் அந்த எவர்கிரீன் நடிகையோடு இவருக்கு இருக்கும் பழக்கம் இப்போது வெளிப்படையாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இது நடிகரின் வீட்டிலும் பூகம்பமாக வெடித்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் பஞ்சாயத்து வீதிக்கு வரலாம் என்கிறது திரையுலக வட்டாரம். இந்த சூழலில் நடிகர் எப்போதோ செய்த ஒரு விஷயத்தை இப்போது தோண்டி எடுத்து சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

அதாவது நடிகர் அந்த எவர்கிரீன் நடிகையுடன் நெருக்கம் காட்டி வந்த சமயத்தில் அவர்கள் சேர்ந்து நடித்த படம் சக்கை போடு போட்டிருக்கிறது. அதை தொடர்ந்து நடந்த வெற்றி விழாவில் நடிகையை ஹீரோ அழைக்கவில்லையாம். இதனால் கடுப்பான அவர் போன் போட்டு நடிகரை கிழி கிழி என்று கிழித்து இருக்கிறார்.

Also read: குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாய் எறிந்த நடிகை.. நரகமான வாழ்க்கை

உடனே நடிகர் அவரை சமாதானப்படுத்தும் விதமாக ஈசிஆர் பக்கத்தில் இருக்கும் ஒரு சொகுசு விடுதியில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாராம். இது நடிகைக்காக மட்டுமே ஸ்பெஷல் ஆக நடந்த கவனிப்பு. எப்போதும் அம்மா துணையோடு வரும் நடிகை அதில் தன் தாய்குலத்தோடு கலந்து கொண்டிருக்கிறார்.

விடிய விடிய நடந்த அந்த பார்ட்டியில் எப்படியோ நடிகர் நடிகையை சமாதானப்படுத்தி விட்டாராம். ஆனால் இந்த விஷயம் அவரின் மனைவி காதுக்கு எப்படியோ சென்றிருக்கிறது. அதை தொடர்ந்து நடந்த பிரச்சனையில் தான் நடிகர் பல வருடங்கள் நடிகையின் பக்கமே திரும்பாமல் இருந்தாராம்.

Also read: டிவி நடிகையை இஷ்டத்துக்கு வேட்டையாடிய மாஸ் நடிகர்.. அழுது புலம்பிய பரிதாபம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்