நெல்சனுக்கு கடிவாளம் போட்ட சன் பிக்சர்ஸ்.. விழி பிதுங்கி நிற்கும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் தலைவர் 169. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய் உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

ஆனால் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. ஆனால் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே நெல்சன் திலீப்குமார் ரஜினி இயக்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மேலும் தலைவர் 169 படத்திற்கு 250 கோடி பட்ஜெட்டை நெல்சன் முதலில் கூறியுள்ளார்.

தற்போது நெல்சன் மீது சன் பிக்சர்ஸ் இருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லாததால் படத்தில் 150 கோடி மட்டுமே கொடுக்கப்படும் மற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட நெல்சன் தன்னுடைய கதைக்கு 100 கோடி பட்ஜெட்டில் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க முடியுமா என தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் சன் பிக்சர் சொன்னதைக் கேட்டு விட்டு தன்னுடைய படத்தை 100 கோடி பட்ஜெட்டில் எடுத்தால் பெரிய அளவில் செட்டு எல்லாம் போட முடியாது. அதனால் தன்னுடைய படத்திற்கான மார்க்கெட் குறைந்துவிடும் என நினைத்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இருவரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை பற்றி பேசியுள்ளனர்.

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169  படத்திற்கு குறிப்பிட்ட தொகையை மட்டுமே தருவதாக கூறியுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் நெல்சன்  இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் பீஸ்ட் திரைப்படம் வெளியான பிறகு இருந்த நிலையில், அதை ரஜினி பிறகு உறுதி செய்தார்.

அப்போது முதல் இப்போது வரை நெல்சனின் மீது நம்பிக்கை இல்லாத சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை ரஜினிகாந்த் தொடர்ந்து சமாதானம் செய்து கொண்டிருப்பதால், தற்போது மீண்டும் பட்ஜெட்டில் கைவைத்த சன் பிக்சர்ஸின் மீது சூப்பர் ஸ்டார் பெரும் சங்கடத்தில் உள்ளார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நெல்சன் படத்தை எப்படி அவர்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில் எடுப்பது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்