Vijay: தளபதி தான் என்னோட குரு.. விஜய்க்கு ஜால்ரா தட்டும் சுந்தர் சி, காரணம் இதுதான்

Vijay: சுந்தர் சி இப்போது ஏகபோக சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் வெளியான அரண்மனை 4 இப்பொழுது குடும்ப ஆடியன்ஸின் ஆதரவை பெற்றுள்ளது.

அதேபோல் வசூலிலும் லாபம் பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக சுந்தர் சி தற்போது பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அதில் அவர் விஜய் குறித்து தான் அதிகம் புகழ்ந்து பேசி வருகிறார். அதன்படி விஜய்யின் ஒரு படம் என் கண்ணை திறந்து விட்டது. என்னுடைய குருநாதர்களில் அவரும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது விஜய்யின் ஒரு படத்தை ரிலீசுக்கு முன் பார்த்த சுந்தர் சி இதெல்லாம் எங்க ஓட போகுது என நினைத்தாராம். ஆனால் அதற்கு எதிர் மாறாக படம் முதல் காட்சிக்குப் பிறகு அடுத்தடுத்த காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

விஜய்யை புகழ்ந்து பேசிய சுந்தர் சி

அதைப் பார்த்து வியந்து போன சுந்தர் சி நமக்கு பிடிச்ச மாதிரி படம் எடுக்கிறதை விட ஆடியன்ஸ்க்கு பிடிச்ச மாதிரி எடுக்கிறது தான் முக்கியம் என தெரிந்து கொண்டாராம். இதை அவருக்கு உணர்த்தியது விஜய்யின் ரசிகன் படம் தான்.

மேலும் விஜய் உடன் இணைய வேண்டும் என எத்தனையோ முறை முயற்சி செய்த போதும் கூட அது சில தடங்கல்களால் முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இப்போது அவர் அரசியலுக்கு வந்து விட்ட நிலையில் அதற்கு வாய்ப்பே கிடையாது.

இருந்தாலும் அவருடைய அரசியல் வருகை நிச்சயம் சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார். இப்படி எந்த பேட்டி கொடுத்தாலும் விஜய் பற்றி நல்ல விதமாக பேசி வருகிறார் சுந்தர் சி.

இதனால் அவர் அந்த கட்சியில் சேர போகிறாரா அல்லது குஷ்பூ இந்த கட்சிக்கு தாவப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் விஜய்க்கு ஜால்ரா தட்டாத பிரபலங்களே கிடையாது என்பது இதன் மூலம் தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்