கவர்ச்சி ஆடை குறித்து விமர்சனம் செய்த ரசிகர்கள்.. தக்க பதிலடி கொடுத்த சமந்தா

தற்போது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி இல்லாத கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். அதெல்லாம் சில காலம் வரை மட்டுமே. சமீபகாலமாக அவர் அதிக கிளாமராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் அவர் வெளியிடும் புகைப்படங்களிலும் அப்படித்தான் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பச்சை நிற உடையில் மிகவும் கிளாமராக உடை அணிந்து சமந்தா அந்த விழாவிற்கு வருகை தந்தார்.

அந்த புகைப்படங்கள் யாவும் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. சமந்தாவின் அந்த ஓவர் கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் மோசமாக ட்ரோல் செய்து கிண்டல் செய்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

அவர்களின் இந்த கருத்துக்கு தற்போது சமந்தா ஒரு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது யாராக இருந்தாலும் பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை தீர்மானிக்கிறார்கள். அவர்களை இனம், படிப்பு, அந்தஸ்து, நிறம் இதையெல்லாம் வைத்து ஒரு பட்டியலே போடுகிறார்கள்.

நாம் இப்போது 2022ல் இருக்கிறோம். ஒரு பெண்ணை அவள் அணியும் உடையை வைத்து மதிப்பிடுவது நிறுத்திவிட்டு உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இதனால் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது என்று ரசிகர்களின் கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதற்கு ரசிகர்கள் கவர்ச்சியான ஆடை அணிந்து விட்டு அதற்கு விளக்கம் வேறு கொடுக்கிறார். சினிமா என்றாலும் ஓரளவிற்கு தான் கவர்ச்சி காட்ட வேண்டும் அத்துமீறி காட்டினால் அவர்களது உண்மை முகம் வெளியாகும் என்று அவருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்